ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
உன்
கழுத்தினை வருடும்
செயினை எடுத்து
கடிக்கின்றாய் வெட்கத்தில்-
என் பற்கள் கூசுகின்றன!
அதை விடு...
நீ
நகங்கள் மெல்ல
கடிக்கும்போது
தெரியுமா?
ஏனோ
என்
விரல்கள்
நாணம் கொள்கின்றன!
நீ
என்னை
திரும்பி பார்க்கையில் எல்லாம்
என்னை
கண்ணாடி பார்க்க செய்கின்றாய்!
நீ
தெய்வம் வணங்க
கோயில் படி ஏறுகையில்
என்னை
காதலை வணங்க செய்கின்றாய்!
சொல் பெண்ணே!
இவை பழக்கமா?
இல்லை இனி என் வழக்கமா?
ரசிகன்!
ரசிகன்!
ஒரு
ஞாயிறு மாலை;
அந்தி உடல் போர்த்தும் வேளை!
வீடு விட்டு
வெளியில் வருகிறேன்,
முன் பின் அறிமுகமில்லாத நீ
யாரென்றே தெரியாத நான்!
குளிர்காலம்
தாளம் போட
ஐஸ்மழை கொட்டிய சாலையில்
கொஞ்சலாய் வருடும் ஈரப்பதம்!
நீ
கால் தடங்களை
மேலோட்டமாய் வரைந்து செல்கிறாய்!
நான்
என் தடம் கொண்டு
அழுத்தமாய் பதிவு செய்தபடி வருகிறேன்!
மெதுவாய் தான் நடந்து வந்தாலும்
மனசு வேகமாய் ஓடிவந்து
மூச்சு வாங்கியபடி,
சாலையை கடக்க நிற்கும்
உன் பக்கம் வந்து நிற்கிறது!
ஏனோ!
சின்னதாய் ஒரு புன்னகை பூக்கிறாய் நீ!
ஏதோ!
உலகை வென்ற இறுமாப்பில் - ரசிகன்!
------------------------------------
நன்றி
யூத்புல் விகடன்!!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/duraipoem230310.asp
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!
ரசிகன்!