ரசிகன்!

*

ஒவ்வொரு
காதலின் சட்டைப்பையிலும்
ஆயிரமாயிரம்
புண்பட்ட மௌனங்களும்
மேம்பட்ட சலனங்களும்
ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன!

அதில்
குறிப்பிடும்படியாக
குறிப்பெழுதும்படியாக

ஒன்றிரண்டு மட்டும்
அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு
பசியாற்றப்பட்டு விடுகிறது!

மீதம் எஞ்சியவை

ஒற்றை மரப்பட்டையிலும்
கோவில் உள் மதில்சுவரிலும்
கடற்கரையோர அலைபரப்பிலும்

காதலியின் பெயரென
அழகாய்
அழுத்தமாய் கிறுக்கப்படுகிறது!

***
நன்றி,
திண்ணை...
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005161&format=html


***
நன்றி,
உயிர்மை
*
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2931
0 Responses

Post a Comment