ரசிகன்!


தலை சாய்ந்து கிடக்கும்
மதுப்புட்டிகளின் வாசத்தில்...
சொட்டுச்சொட்டாய் புணரும்
அமில உணர்வுகள்!

எந்த ஒரு நிகழ்வையும் போல
ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ
சலசலப்போ இல்லாதிருக்கிறது!

மயான அமைதி என்பதை
ருசித்தும் புசித்தும்
பேனாக்கள்
இச்சைகளை தீர்க்கப்போகும்
காகித இரவின் கடைசிப் பகுதி!!

குறிப்பெழுதல் புதிதல்ல
எனினும்
மரணக்குறிப்பெழுதல்
சற்றே அசௌகரியமாய் தான் இருக்கிறது!

இதுவரை இல்லாததொரு
பயம்!
இடையிடையே தொற்றிக்கொள்ள
அது எதற்காகவேனும் இருக்கலாம்-
நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்!

எனக்கு
அவள் பிரிவு!



-ரசிகன்

***

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110111&format=html

*
0 Responses

Post a Comment