ரசிகன்!


இன்னும்
மூடிக்கொண்டே இருக்கிறாய்
மொட்டெனும் உடையில்!

அவள்
பேரழகின்
உச்சத்தை நுகர்ந்திட

இன்னும்
ஒரு பொழுதெல்லாம் தாங்காது!
விடிகிற வேளை...
நீ பூப்பெய்திய வாசத்தோடு தான்!

சொல்!
என்ன கூலி வேண்டுமென்று?

தென்றலை
கொஞ்சம் தட்டி விடவா?
நிலவை
கொஞ்சம் கூட்டி விடவா?
பனியை
கொஞ்சம் தீ மூட்டவா?
இரவை
கொஞ்சம் கண் மூடவா?

என்ன தான் நான் செய்தாலும்
இப்படித்தான்
கிறுக்குத்தனமாய் ஏதேனும் பேசிவிட்டு
சுயநினைவுக்கு வருகையில்

என்னையே நான் மறந்து விடுகிறேன்!

-ரசிகன்


நன்றி ,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011076&format=html


*
0 Responses

Post a Comment