ரசிகன்!



ஒரு குறிப்பிட்ட
சில தோழிகளை மட்டும்
எண்ணம் பட செய்கிறது
ஒரு 555 சிகரெட்டும்
ஒரு கிளாஸ் ஜானி வாக்கரும்!

பேசப்படாத நாட்களில்
மௌனங்களுக்கு
ஊற்றி விடவோ
பற்ற வைக்கவோ
தவறியதில்லை நினைவுகள்!
.
அதிகப்படியான அன்பென்பதும்
தூக்கலான நட்பென்பதும்
ஒரு சிட்டிகை காதலில்
சமன் செய்யப்படுதல்
குறித்த விவரம்
கேட்டே தீர வேண்டும்
அத்தோழிகளிடம்!

எவள் எவள்
எந்தெந்த ஊரில்
எந்தெந்த நாட்டில்

பழைய தோழிகளாக,
புதிய காதலிகளாக,
மனைவிகளாக என்ற தகவலில்...

கையை சுட்டுவிட்டது
சிகரெட் துண்டு!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310122718&format=html


*
ரசிகன்!



ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை
உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!

கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
அலட்டிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!

மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
சலனப்படும்
சில புன்னகை மழைகள்...

ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களையோ
கவர்ந்து விட எத்தனிக்க

முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!

- ரசிகன்

நன்றி
கீற்று
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11930:2010-12-14-20-17-40&catid=2:poems&Itemid=265



*
ரசிகன்!



ஒரு பெண்ணின்

மிக குறுகிய சிரிப்பழகில்

விரிந்திருக்கும் ரகசியங்கள்...


ஈர்த்தல்

அல்லது பொய்த்தல்

அவரவர் சௌகரியத்திற்கு!


ஒரு கிளாஸ் பழரசத்தில்

ஈருயிர் உறிஞ்சுதல்

அடுத்தவன் பார்வையின் பொழுதுபோக்கு...


இதை காதலென

குழம்பி விடுதலும்

குழப்பி விடுதலும்

அடுத்தவன் காதலியையோ

அடுத்தவள் காதலனையோ

தரம் மாற்றும் கூடுதல் சிறப்பு...


பெண்மையின்

இயற்கை சீற்றங்களில்

பாகுபாடு இருப்பதில்லை எவருக்கும்...

குறிப்பிடும்படியாக எனக்கும்!

மேற்கூறியபடி


மேஜையில் சிந்திய

சில உண்மைகளும்

கிளாசில் கசிந்த

பல உளறல்களும்...

ஏனோ அடுத்த வோட்கா பாட்டிலில்

அதிக விருப்பத்தை

ஏற்படுத்தி விடுகின்றன..."


- ரசிகன்


நன்றி
திண்ணை
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31012196&format=html


*
ரசிகன்!



மனித
உணர்வுகளின்
கூட்ட நெரிசலை
தாக்குபிடிக்க முடியாது

பனிக்குளிரும் மனக்கரடியும்
கூட்டு சேர்ந்து கொள்கின்றன
ரயில் வண்டி பெண்ணிடம்!

மூச்சுக்கு
முன்னூறு முறை சிலாகித்துக்கொள்கிறாள்
மெல்லிய அழகாடையை!

புதுசாய் பூத்த
ஒரு புன்னகையை நீட்ட
தன் இதழ்களில்
வாங்கி மடித்துக்கொள்கிறாள்!

என்ன செய்துவிடலாமென்பது
சக பயணிகளின்
சௌகரியத்திற்கு விட்டுக்கொடுத்து விட

ஊர் பெயர் தெரியாத
அந்த பெண்ணிடம்
நிறுத்தத்தில் சொல்லிவிடலாம்
அல்லது கேட்டுவிடலாம்
போன் நம்பரை!

இவள் நிச்சயமில்லை...
அடுத்த நிறுத்தத்தில்
வேறொரு பெண்ணும் ரயில் ஏறலாம்!

- ரசிகன்
ரசிகன்!


பனி தழுவிய
முன்வாசலில்
மழைகளை எதிர்பார்த்து
வழிகின்றன வண்ணத்துப்பூச்சிகள்...

முன்னிரவிலே முடிவாகியிருந்த
இன்றொரு நாள் சந்திப்பில்

ரேகைகளை
வாசற்கதவுகளில் செலுத்தி
மெதுவாய் கனியும் பாதங்களில்
உயிர் துடிப்பு
ஏற்றம் இறக்கம் கண்டதும்,

வரவேற்பினை மறந்து
வசீகரித்து கொண்ட
பார்வைகள் பேசிய அடுக்கு மொழிகளும்

கவிதைகள் தான் காமத்துக்கு!

பின்வாசலை
நுகர்ந்த செடிகளின்
ஒற்றை ரோஜா பூத்துவிட்டதாய்
பெருமிதப்பட்டவள் பறித்தே விட்டாள்!

நீட்டிய ரோஜாவை
என் விரல்கள் பற்ற
திரும்பிக்கொண்டாள்
கூந்தலை முன்னிலைபடுத்தி...

ஆக,
மழை பெய்ய தொடங்கியிருந்தது
என் வீட்டுக்குள்!


நன்றி
திண்ணை

*

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310121216&format=html


*
ரசிகன்!


ஒரு

அர்த்தமற்ற இரவில்

நிலா கவிதை தோன்றும் எனக்கு...

காதலி

கை நிறைய அள்ளிக்கொடுத்த நிலாக்களை

ஒவ்வொன்றாய் பிரித்து படிக்கும்

பட்டாம்பூச்சி இரவு...

ஒரு நிலாவில்

குழந்தை முத்தமிடும்...

பதிலுக்கு பதில் முத்தம் தருவாள்!

ஒரு நிலாவில்

மழை பெய்யும்..

தாவணி குடையில்

கதை பேசி வருவாள்...

ஒரு நிலாவில்

பூக்கள் கூட்டம் போடும்...

இவள் தலைமை தாங்கியிருப்பாள்!

இடையில்

தேநீர் முடித்த பட்டாம்பூச்சிகளிடம்

தெளிவாய் சொல்லிவிடுகிறேன்...

பெரும்பாலான இரவுகளில்

நிலாக்கள்

நிலாக்களாய் இருப்பதில்லை-

அவள் தூங்குகிறாள்!

-


-ரசிகன்

நன்றி ,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310120511&format=html



*
ரசிகன்!


மழை
தன் முதல் முத்தத்தினை
உச்சரிப்பதாய் தொடங்குகிறது
அவள் பிரவேசம்!

பின்னிரவுகளின் விடியலை
பனிமூட்டங்கள் நிர்ணயம் செய்ய
மெதுவே சோம்பல் முறிக்கும் காதல்!

விடாப்பிடியான அன்பில்
ஊடல் கூடல் என்பதாக
இரவு நனைக்க
விட்டது தொட்டது
எல்லாமே காதல் தான்!

காதல் எத்தனித்த ஆண்மையிடம்
ஒரு புன்னகையை காட்டி
வழிமறிக்கும் பெண்மையில்
சமுத்திரத்தையே குடித்துவிட்ட பொழுதுகள்
பரவசம்!

ஒரு தேவதை கதையில்
பிசாசு வருவதை எவரும் விரும்புவதில்லை...
நானும் விரும்பவில்லை...

காலம்...
அவள் பிரிதலுக்கு
ஒரு மௌனம் காட்டி
உயிரை வழியனுப்புதலில்
சமுத்திரத்தையே மூழ்கடித்துவிட்ட கண்ணீர்
விஷரசம்!

தானே மறந்துபோயும்
வருகை பதிவேட்டை
பூர்த்தி செய்ய மறப்பதில்லை நினைவுகள்!

போகுற போக்கில் தாகம் தீருமென்ற
காட்டாற்று தண்ணீராய்
இந்த நினைவுகளின் இல்லத்தில்
தாழ்ப்பாள் ஏதும் இல்லை...
கதவு திறந்து தானிருக்கிறது!

- ரசிகன்

நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112815&format=html



*
ரசிகன்!


காதல் சொல்ல வந்து

மௌனங்கள் சொல்கிறாள்!

கால்கள் நீட்டி

ஒன்றின் மேலொன்று போட்டு

கைகள் கட்டிக்கொண்டு

படகு முதுகில்

ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டாள்..

பூ விற்பவளோ

சுண்டல் விற்பவனோ மட்டும்

அவள் மௌனம் களைய அனுப்பப்பட்டவர்கள்!

வார்த்தைகள் மீட்டெடுக்க

அவள் பொறுமை இழப்பதும்

கரையை தொட்டுச்செல்ல

அலைகள் மீண்டெழுவதும்

தவிப்பு தான்

கடலுக்கும் காதலுக்கும்...

ஒரு முறை

என் பெயர் சொல்லி பார்க்கிறாள்!

அந்த மௌனம்

எனக்கு கேட்பதாய் இல்லை...

மறுமுறை

என் பெயர் சொல்லி அழைக்கிறாள்...

“என்ன?” என கேட்க முற்படும்

அந்த இடைவெளியை

அலைகள் நனைத்துப்போக

வினாடிகளின் நேரத்தில்

என் தோள் சாய்ந்து கொண்டாள்

முழுக்காதலையும்

என் உள்ளங்கையில் பிரசுவித்தபடி!

நான் காதலன் ஆகிறேன்...

மௌனம் மௌனமாகவும்

கடல் இன்னும் கடலாகவுமே இருக்கிறது!

-ரசிகன்

நன்றி,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112112&format=html


*
ரசிகன்!


பசி!
உடல் உரசும் இசை!
பெருமூச்சு வேதம்!

பட்டினி!
குடல் பிண்ணும் ஓசை!
மரணமூச்சு விவாதம்!

ஒரு பிறப்பு
அல்லது ஒரு இறப்பு
உத்தரவாதம்!


- ரசிகன்
ரசிகன்!



ஒரு பார்வையின் கவனத்தை
திசை திருப்புதலை விட
வேறொன்றும் பெரியதாய் இல்லை....
அவளை சொல்ல!

ஒரு குழந்தையின்
புன்சிரிப்பை காட்டிலும்
அழகாய் பூத்திருந்ததுஅவள் புன்னகை..

பெண்ணினத்தின்
மெல்லிய பொறாமையை விட
சிவப்பு பட்டிருக்கும்
அவள் இதழ்களின் வண்ணப்பூச்சு...

எப்போதேனும் சீறிப்பாயும்
வால் நட்சத்திரத்தை விட
கொஞ்சம்
நிதானமாய் அவசரப்படும்
அவள் காதோர மயிறிழைகள்!

எஞ்சியவை
வெட்கம் கொள்ள...
எனக்கும் கொஞ்சம் வெட்கம் தான்
அவைகளை எடுத்துச் சொல்ல...

ஹ்ம்ம்....
இவளை நிலா என்றோ
பட்டாம்பூச்சி என்றோ
அன்னியப்படுத்துதலை விட

என் காதலுக்கினிய
காதலி என
அறிமுகப்படுத்துதல் சிறப்பு!

வேறொன்றும் பெரிதாய் இல்லை
அவளை சொல்ல..
வெறும் அழகி எனலாம்...
போதுமானது!

-ரசிகன்



நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310111421&format=html


*
ரசிகன்!



நடந்து முடிந்தவற்றை
பேசிக்கொண்டிருந்தது
ஒரு அகால டைரி!

பக்கம் பக்கமாய்
பேனா மையின் ரேகைகள்
சற்று கீறலுடன் கையொப்பமிட்டிருந்தன!

நேற்று முடித்த
பக்கத்தின் கடைசி வரியில்
மை தீர்ந்து போக

இன்று எழுத முடியா மிச்சத்தை
மொத்தமாய் நிறைவு செய்தது
ஒரு அகால மரணம்!

- ரசிகன்

நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/

*
ரசிகன்!


இன்னும்
மூடிக்கொண்டே இருக்கிறாய்
மொட்டெனும் உடையில்!

அவள்
பேரழகின்
உச்சத்தை நுகர்ந்திட

இன்னும்
ஒரு பொழுதெல்லாம் தாங்காது!
விடிகிற வேளை...
நீ பூப்பெய்திய வாசத்தோடு தான்!

சொல்!
என்ன கூலி வேண்டுமென்று?

தென்றலை
கொஞ்சம் தட்டி விடவா?
நிலவை
கொஞ்சம் கூட்டி விடவா?
பனியை
கொஞ்சம் தீ மூட்டவா?
இரவை
கொஞ்சம் கண் மூடவா?

என்ன தான் நான் செய்தாலும்
இப்படித்தான்
கிறுக்குத்தனமாய் ஏதேனும் பேசிவிட்டு
சுயநினைவுக்கு வருகையில்

என்னையே நான் மறந்து விடுகிறேன்!

-ரசிகன்


நன்றி ,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011076&format=html


*
ரசிகன்!


முகவரி இழந்த சருகுகளை
எண்ணம் தீட்டிக்கொண்டு நடக்கிறேன்..

என் நினைவு சத்தத்துக்கு
ஈடு கொடுத்துக்கொண்டு
சருகுகளின் பின்னணி இசை..

என் முகவரியை தேடியபடியே
ஒரு மௌனப்பாடல்!

நாளை நானும் சருகாகலாம்...
நீங்கள் பாட்டெழுதிக்கொள்ளுங்கள்!

- ரசிகன்
ரசிகன்!


தலை சாய்ந்து கிடக்கும்
மதுப்புட்டிகளின் வாசத்தில்...
சொட்டுச்சொட்டாய் புணரும்
அமில உணர்வுகள்!

எந்த ஒரு நிகழ்வையும் போல
ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ
சலசலப்போ இல்லாதிருக்கிறது!

மயான அமைதி என்பதை
ருசித்தும் புசித்தும்
பேனாக்கள்
இச்சைகளை தீர்க்கப்போகும்
காகித இரவின் கடைசிப் பகுதி!!

குறிப்பெழுதல் புதிதல்ல
எனினும்
மரணக்குறிப்பெழுதல்
சற்றே அசௌகரியமாய் தான் இருக்கிறது!

இதுவரை இல்லாததொரு
பயம்!
இடையிடையே தொற்றிக்கொள்ள
அது எதற்காகவேனும் இருக்கலாம்-
நீங்கள் யூகித்துக் கொள்ளுங்கள்!

எனக்கு
அவள் பிரிவு!



-ரசிகன்

***

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110111&format=html

*
ரசிகன்!



எல்லாமும்
முடிந்து போயிருக்கும் இந்நேரம்!

அணையப்பட்ட விளக்கு
ஏற்றப்பட்டிருக்கும் இவ்வேளை

என்னில் கொஞ்சியதைப்போலவே
வாழ்வை தொடங்கியிருக்கக்கூடும் அவள்!

கடவுள் இருந்திருப்பதாக
பலமுறை வேண்டியிருக்கிறாள்...
நீ,
நான்,
நம் குழந்தை
என ஒரு உலகுக்காக!

நிராகரிக்கப்பட்டது!
பதில்- ஆதாம் ஏவாளுக்கு காவு விடப்பட்டிருக்கும்!

இனிவரும்
உணர்வுகளோ , வார்த்தைகளோ
ஆபாசமானதாகவும்
வன்மையாகவுமே இருக்கக்கூடும்!

நானும்
சராசரி மனிதன் தானே?
திடப்படுத்திய மனதுடன்
புள்ளி வைக்கிறேன்!

உங்களில் யாரேனும்
காதலியை தாரை வார்த்திருக்கக்கூடும்!
என்னால் தொடர முடியாத
இக்கவிதையை
நீங்கள் முடித்து வையுங்கள்...

என் மௌனம்..
என் தனிமை..
எனக்காக காத்திருக்கிறது!

*
நன்றி!
வார்ப்பு

http://vaarppu.com/view/2285/



*
ரசிகன்!


உங்கள்
எவரையும் போல் நானில்லை!
ஒரு நட்பு மட்டுமல்ல...
ஒரு காதலையும் தொலைத்தவன்..
என்னையும் தான்!

என்னைப்போல
நீங்களும்
ஏதேனும் ஒரு நினைவோடு/ தோல்வியோடு
புழுங்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்...
என்ன ஒன்று...
அதை வாசிக்கவோ / ரசிக்கவோ
உங்களிடம் நீங்கள் இல்லை!

இப்படியான நினைவுகளை விட
ஒரு கொடூர விலங்கொன்று இருக்குமாயின்
நிச்சயம்
அது நானாகத்தான் இருக்கக்கூடும்-
என் ஆசைகளை கொன்று திண்கிறேன்!

நிழலை
விழுங்க முயற்சிக்கும் என் இரவில்
பேய் என படரும்
அவள் நினைவுகள்
இம்மனித பிசாசை
தூங்க விடப்போவதில்லை...

அவளின்
தீரா தாக நினைவுகள் பட்டு
தெறிக்கிறது என் மௌனம்...
ஒன்று கவிதையாகி விட்டது!
மற்றவை அனாதையாகி விட்டது!

-ரசிகன்

நன்றி,
வார்ப்பு!
*
http://vaarppu.com/view/2285/


*
ரசிகன்!


ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்கிறது!


காலை நடந்தேறிவிட்டதொரு

சுப காரியத்தில்

என்னில் ஒரு பாதியை

அரை மனதோடு வாழ்த்தியாகி விட்டது!


அர்ச்சதைகளும்

மேள தாளங்களும்

என்னை முழுமையாய் மறக்க செய்திருந்தன

இந்த முழு பொழுதையும்...


கடந்து போன இரவுகளை விட

இவ்விரவு

சற்றே அசௌகரியமாய் அரங்கேறுகிறது...


மின் விசிறியின் சுழற்சிக்கு

முதல் காதல்

தாக்கு பிடிக்க இயலாது

தலை சுற்றி கொண்டிருக்கிறது....


தேகம் தவிர்த்து

உயிர் முழுதும் காதலித்த தருணங்கள்

அழ தொடங்குகின்றன...


வேண்டாம்..

இனி அழுது என்ன ஆகப்போகிறது?

என்னையே தேற்றி கொள்கிறேன்...


பயனிருப்பதான அறிகுறியில்லை...


இதயத்துடிப்பு அதிகரிக்கிறது...

வார்த்தைகளை பிடித்திழுக்கிறேன்...


உடல் வியர்க்கிறது...

நினைவுகளை அழுத்தி வைக்கிறேன்!


சாத்தப்பட்ட கதவுகளில்

பயம் தொற்றிக்கொள்வதும்


ஜன்னல் திரை மறைவில்

புழுக்கம் உளருவதுமாய்....


தனிமை கையோங்கிட

ஒரு வித

நடுக்கத்திலேயே இமைகள் அடைக்கிறேன்...!


ஒரு மரணத்தை ஒத்த

நிகழ்வு என்னை சூழ்ந்து கொள்கிறது!


-

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=310101712&format=html

*
ரசிகன்!


என் தாய் மொழி தமிழ்...
ஆங்கில வழியில் பயின்றவன்! பயின்று கொண்டிருப்பவன்!
தமிழை சுவாசிப்பவன் அல்ல! நேசிப்பவன்!

இன்று காலை... என் முகநூலில் (FACEBOOK) தகவல் பெட்டிக்கு ஒரு தகவல் வந்திருந்தது...
என் நட்பு வட்டாரத்தில் ஒருவர்.. அவரை பற்றி முழுமையாக தெரியாது...
ஒரு கவிஞர் , எழுத்தாளர் என்றளவில் மட்டும் தெரியும்... அவரை மதிக்கிறேன்! அவரிடமிருந்து தான் அச்செய்தி

வந்த செய்தி:
--------------
(NO EDIT! ONLY CUT , COPY & PASTE)

"உங்களை மாதிரி இடியட் இன்டியன் சிலரால் தான் தமிழே சாகுது. நாங்கள் தமிழை வளக்கிறம். நிங்களோ கவிதை மட்டும் தமிழில் எழுதிப்போட்டு மிச்சமெல்லாத்தையும் ஆங்கிலத்தமிலில் பதிலா. ஏன?; இப்படி கிறுக்குத்தனமா செய்து தமிழை மட்டுமல் எங்களையும் கொல்லுறியள். ஓ நானும் இடியட் இன்டியன் என தமிழில் எழுதினேனா. அப்பிடிச்சொன்னாத்தானே உங்களுக்கெல்லாம் புரியுது.அது தான். உங்களை எனது நட்பு வட்டாரத்தில் இருந்து நீங்கிக்கொள்கிறேன்."


கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது... இருந்தும் என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்!

* நான் தமிழ் வளர்ப்பவன் அல்ல!
* நான் ஆங்கிலம் எதிர்ப்பவன் அல்ல!

எனக்கு தமிழ் முழுமையாய் தெரியாது... படித்த/தெரிந்த/புரிந்த/அறிந்த தமிழை கொண்டு கவிதை என்ற பெயரில் (கவிதை இல்லை) வார்த்தைகளை கோர்த்து விடுகிறேன்! அவ்வளவே!

நான் தமிழை எதிர்ப்பவன் போலவும்... கொலை செய்பவன் போலவும் எவ்வளவு அழகாய் சொல்லி விட்டார்கள்!

அதெல்லாம் விடுங்க!
நான் என்ன சொல்ல வரேன்னா...

பின்னூட்டத்திலோ / அல்லது வேறேனும் இடத்திலோ நான் ஆங்கிலம் உபயோகித்தல் பிடிக்காதிருக்கும் பட்சத்தில் தாங்களே என்னை நீக்கிக்கொள்ளலாம்!
தமிழை கொலை செய்யும் நோக்கம் எதுவும் இதுவரை இல்லை... நீங்கள் வந்திருப்பதாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :)
உங்களின் கண்டிப்போ/தண்டிப்போ/நீக்குதலோ என்னை எதுவும் செய்யப்போவதில்லை!

நான் நீங்கள் இல்லை! உங்களைப்போல் இல்லை!

இது என் விருப்பமாகவும் இருக்கலாம்... நிர்ப்பந்தமாகவும் இருக்கலாம்!

பி.கு : ஏதேனும் தவறாகவோ / மரியாதை குறைவாகவோ / தமிழை இழிவாகவோ பேசியிருந்தால்... இச்சிறுவனை மன்னிக்கவும்!

நன்றி,
ரசிகன்

*
ரசிகன்!




ஜன்னலோர பேருந்தின்

பயணத் தருவாயில்...

கடந்து செல்லும்

ரோஸ் கலர் சட்டை

பள்ளிக் குழந்தை

சிரித்து கைகாட்ட கூடும்..

அருகில் அமரலாமா என

வெள்ளை சுடிதார்
கல்லூரித் தாரகை

அனுமதி கோரக்கூடும்...

கூட்ட நெரிசலில்

சாலையோர மரங்களோ

குலுங்கும் செம்மஞ்சள் பூக்களோ

அவசரத்தில் வழியனுப்பி வைக்கக்கூடும்!

சில்லென்று காற்று

கூடவே அழைத்து வரும்

ஒருசில மழைத் துளிகளை

முகம் தூறக்கூடும்!

பயண தூரமும்

மனதின் துயரமும்

எந்தவொரு பாரமின்றி

அவ்வளவு சாதாரணமாய் இருந்திருக்கிறது!

நொடிப்பொழுதில்

ஒரு சின்ன களைப்போடு

இடிபாடுகளில் சிக்கி

வெளிவருகையில் தான்

அசம்பாவிதங்கள்

நினைவுக்கு வந்து செல்கின்றன!


-ரசிகன்

நன்றி
திண்ணை!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310101014&format=html
ரசிகன்!




எனக்கென்ன அவசியப்படுகிறதென

யோசித்ததைக்காட்டிலும்

பெருமளவு நேரங்கள்

அவள் யோசனையிலேயே மரணித்து விட்டன!


என்னை

அவளுக்கு பிடிப்பதை காட்டிலும்

அவளுக்கென்ன பிடிக்கும்,

பிடித்திருக்கிறதென பட்டியலிட்டதில்

இன்னொரு தவணை வாழ்ந்திருக்கலாம் போல!


அடங்கா பசியென

வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே இருக்கிறேன்!


மௌனம்

அவளுக்கு புரிவதாக இல்லை...

அவளினத்து மலர்களும் அரியணை ஏறுவதாயில்லை...

கவிதைகள் காகிதத்தின் படி தாண்டுவதில்லை...


நிறைவு பெறாத விழாவின்

நன்றியுரை மட்டும் எனக்கு!


இனி என் விருப்பங்கள்

கனவுகளினேனும் திணிக்கப்படட்டும்...


பிரசுவிக்கப்படாத காதல்

காத்திருப்பில் நிற்க


அவளை பார்த்த பார்வையிலேயே

நின்று கொண்டிருக்கிறேன்...


இன்றோடு

எண்ணி 675 -ஆம் நாள்!



- ரசிகன்

**************

நன்றி
திண்ணை
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310100213&format=html
*
ரசிகன்!



சந்தர்ப்ப வசத்தில்

பகிரங்கமாய் ஒன்றிய

இரு இதழ்களின் பின்னணியில்...

மலர்ந்திருந்தது ஒரு முத்தப்பிழை!


கால்கள் வேரூன்ற..

திருத்தம்...

காதல் வேரூன்ற..

கண்ணா பின்னாவென ஈடேறியது வயசுப்பயணம்!


உடல் சொன்னதை

மனசு கேட்கும் அவலம்!

காடு மலை பாதையெல்லாம்...

ஸ்பரிசத்தின் நிழற்குடை எனலாம்!


கால வெறியாட்டத்தில்...

பிச்சு எறியப்பட்ட மனதின்

அழுகுரல் மரண ஓலம்... !


உயிர், மெய் விடுபட

வார்த்தைகள் முடக்கப்பட்டு

மௌனம் திண்ணும் காட்சியில்...


எதேச்சையாய் விளையும்

சில அங்கீகரிக்கப்படாத நட்புகள்!


பாரம் தாங்காது

தோள் சாய விழைகையில்...

நட்பு உறைந்து விடுகிறது

தன் உள்ளங்கையில் பதிக்கும் ஈர முத்தத்தில்...


நட்பு அங்கீகரிக்கப்படுவதாய் எண்ணி

மீண்டுமொரு முத்தப்பிழை...!


- ரசிகன்

***

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31009266&format=html

*
ரசிகன்!
*

காத்திருப்பில்
நிலவிழந்தவளாய்

தேகம் தொட்ட
இலை மேல் கோபம் அவளுக்கு!

காம்பினை விரல் நுனியிலும்
நுனியினை இதழ் மறைவிலும்
பற்கள் இலகுவாய் மெல்ல
அவ்விதழ் உரசிய எச்சிலின்
எங்கோ ஒரு மூலையில்
எனதுயிர் நனைத்துவிடுகிறாள்!

***

நன்றி
உயிர்மை / உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3234
ரசிகன்!
ஒரு காமம்

தலைக்கேறியிருந்தது...

ஊரறியா நாற்சுவரில்

உலகம் அடங்கிப்போயிருந்தது...


ஒரு காதல்

சலசலத்துப்போயிருந்தது...

ஆர்ப்பரிக்கும் உடல் பேச்சுக்கள்

அடக்கமாய் போர்த்தியிருந்தது!


ஒரு தனிமை

மௌனித்திருந்தது....

நண்பகல் வேளையிருக்கும்

மது வாசம் வீசிக்கொண்டிருந்தது...


ஒரு இரவு

வெடவெடத்துப்போயிருந்தது...

காற்றாடி அசைவிழந்தும்

நாற்காலி தலைகுனிந்தும் வீற்றிருந்தது!


ஒரு பகல்

இழவாகி போயிருந்தது....

சுற்றமும் நட்பும்

ஒரு பிரிதலுக்கு தயாராகியிருந்தது!


ஒரு கவிதை

கனத்துப்போயிருந்தது...

.....

.....

.....

சங்கதி என்னவாயிருக்கும்?

*

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007189&format=html
ரசிகன்!



ஓரிரவுக்கு ஒன்றென
பதின் வயது போட்ட கணக்கு
ஆயிரங்காதல் கதை...

பேசும்
பெண்ணின இரவுகள்
உறங்குவதே இல்லை...
விடியலும் மடி சாய
சுடுமண்ணிலும் காதல் வாசம்!

வீரியம் விரிவடைய
வெட்டுண்டு போயின
காதலும் நட்பும்!

மனங்கள் வேரறுக்கப்பட்ட நிலையில்...
புதியன புதியதாய்
இலைமறை காதல்
இது மூன்றாம் பாலினம்!

நட்பை
காதல் புரியா ஒரு நிலையில்..

அவனோ அவளோ
பிண்ணப்பட்டிருந்த மாயவலையில்...
சிக்கி
சின்னாபின்னமாய் போயிருந்தன
நட்பின் செல்லப்பெயர்கள்!

தோழி துவங்கி
தோழன் ஒதுங்க....

ஒரு அவன்
ஒரு அவளுக்கு
ஒரு இராக்கவிதை!


-ரசிகன்


நன்றி
திண்ணை!

*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007116&format=html
ரசிகன்!


காதல் சபிக்கப்பட்ட
ஒரு பேனா முள்ளில்
பெண்மை உமிழும் அகராதி
காதலி!

இக்கவிதை...
நமக்கானதாய் புனரமைக்கப்பட்ட பூமி!
வெண்ணிற நிலவும்
செந்நிற ஆப்பிள்களும்
தடை செய்யப்பட்ட
இந்நட்சத்திர தோட்டத்தில்

நீயென நான்
நானென நீ
கவிதையென எழுதி முடிக்க
காதலென கொஞ்ச வார்த்தைகள்!

தூறல் விழும்
சிறு மழை காட்டில்
ஊடல் அவ்வப்பொழுது நனைந்துவிட்டுப்போகும்!

பெண்மை பேசும்
புது வெட்கம் போல
சலனம் எப்போதாவாது பொய் பேசிப்போகும்!

அவள் அன்றி அவளாடை
தீண்டி விடும்
காற்றோ, புல்லோ , பூக்களோ
எந்நேரமும் ரீங்காரமிடும் காதலிசையென!

பகலுக்கு இரவின் மீதிருக்கும்
தீராத ஆசையையும்

இரவுக்கு பகலின் மீதிருக்கும்
தீராத பகையையும்

எழுதி முடிக்க வார்த்தைகளற்று
களைப்புற்று இளைப்பாற

கண் விழித்து பார்க்கையில்
காதலி மடியில் துயில் கொண்டது
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

- ரசிகன்

*

நன்றி!
கீற்று..

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9876:2010-07-07-04-38-45&catid=2:poems&Itemid=265

*
ரசிகன்!



தெருமுனை காத்திருப்பில்
தினம் தினம்
உன் வருகைக்காய் நான் !

தோழிகளும்
புத்தகமுமாய்
கை வீசி
கலகலப்பாய்
பேசி வருவாய் நீ...

அன்றொரு
மிகைப்படியான மாலை பொழுதில்

எனை
கடக்கையில் மட்டும்

பார்வைகளை
கட்டாயப்படுத்தி திசை திருப்பி

புத்தகத்தை
மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டாய்...

புது
காதல் உணர்வோடு நீ!

உன் உணர்வறியா
குற்ற உணர்வோடு நான்!

-
ரசிகன்!
ரசிகன்!



என்
வலதுபுறம்
நடந்துகொண்டு நீ!

உன்
ஒவ்வொரு அடியிலும்

இடதுபுறம்
உடைந்துகொண்டு நான்!

*

நன்றி
நிலாச்சாரல்
ரசிகன்!


அடியே!

உண்மையில்
நீ
அழகி தான்!

அது
ஏனோ!

நான்
பொய் சொல்கையில்
மட்டும்
பேரழகி ஆகி விடுகிறாய்!
ரசிகன்!



என்
காதல் புத்தகத்தின்
முதல்
பக்கமும் நீ!
கடைசி
பக்கமும் நீ!

இடைப்பட்ட
பக்கங்கள்
தணிக்கை செய்யப்பட்டவை!!!
ரசிகன்!


மதுவை
ஒத்திருக்கும் மானுடம்!

போதையென பொழிதல்
மழையாய் தெரியலாம்!
நனைதல் விசித்திரமல்ல...
சிலருக்கு சுகமென தெரிவது
ஒரு சிலருக்கு
எரிச்சலாய் இருக்கலாம்!

குடை பிடிக்குமாம் காதல்....
ஆண் வாசனையை
உள்ளமுக்கியபடி!
யாரோ இறைத்து சென்ற சேறும்
சட்டைப்பையில் பத்திரமாய்!

நேற்று அவளென பேசியவன்
மாறுதலுக்கு உட்பட்டு
இன்று இவளென சொல்வதில்
ஆச்சரியமும் அதிர்ச்சியும்
எவருக்குமில்லை
நாளை
உன்னை சொல்லாதிருக்கும் பட்சத்தில்...

தலைக்கேறிய உச்சத்தில்
முட்டிவிடுகிறான்...
அடி என்னவோ
நட்பிற்கும் சுற்றத்திற்கும்...

எதற்கும்
கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்...
கடந்து வருகிறது
அதே மழை!

- ரசிகன்

நன்றி,
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=9746:2010-06-24-01-58-30&catid=2:poems&Itemid=265
ரசிகன்!



தேனூறும் சிறுப்பூவில்
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல

யாருமில்லா தனிமையிலும்
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது
ஒரு நினைவும் ஒரு நிழலும்!

முகம் கொடுத்து பேச இயலாது
எல்லோரும் முகம் சுழிக்க
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!

சூழ்நிலை இசையிலும்
நினைவுகளின் அலைவரிசையில்
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!

இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!

மீண்டெழும் சாத்தியக்கூறுகள்
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....

தனிமை பிடித்திருக்கிறது-
எனக்கு நானே செய்துகொண்ட
மானசீக ஒப்பந்தம்!


*
நன்றி,
வார்ப்பு!

http://www.vaarppu.com/view/2193/
ரசிகன்!


"
புரியும் புரியாது
கோபத்தின் காரணம்!
செய்வதேதும் அறியாது
கண்ணீரில் போர் தொடுக்கிறாள்!

காத்திருப்பு...
எனக்கும் காதலுக்கும்...
புரிந்திருக்குமாயின்
தலைக்கோதி தேற்றும்பட்சத்தில்
காதல் அடிமையாகிப்போயிருக்கும்!

இனி
என்னவெல்லாம் நான் கேட்க
பதிலுக்கு கேள்வி தருகிறாள்...
மௌனம் தலைகாட்ட
முத்தம் கொண்டு மீட்டுகிறாள்!


நான்
பொய் சொல்லும்போதெல்லாம்
வெட்கம் கொண்டு கேட்கிறாள்...
காதலி கர்வம் கொண்டு
காதலையே அதட்டுகிறாள்!

புரிதல்
சாத்தியப்பட்டிருக்கும்
ஒரு அசாதாரண வேளையில்

நித்தம் ஒரு யுத்தம்...
ஹார்மோன்கள் விளையாட்டு!
புரிந்தும் நழுவுகிறாள்
இனி கண்ணாமூச்சி விளையாட்டு!

-
ரசிகன்

*
நன்றி!
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006202&format=html
ரசிகன்!


அன்று
நம் காதலுக்கு
மூன்று வயது!

பரிசாய்
எது கொடுத்தாலும்
போதாது என்றாய்!

உரையாடிய
இதழ்கள்
உறவாட ஆரம்பித்தன!

போதும் என்றாய்!

நினைவிருக்கிறதா?

*
நன்றி!
நிலாச்சாரல்

http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
ரசிகன்!



கடற்கரை மணலில்

என்
பாதச்சுவடுகளில்
நீ
கால் பதித்தபடி வந்தாய்..

இடையில்
நீ
நின்று விட

கால்
வலிக்குதா என்றேன்...

இல்லை இல்லை...
காதலிக்கிறேன் என்றாய்..

நினைவிருக்கிறதா ?

*

நன்றி!

நிலாச்சாரல்
http://www.nilacharal.com/ocms/log/10120906.asp
ரசிகன்!


ஆடையிருக்க
வெட்கமெதற்கென
ஒரு வரியாய் வினவ

" ஐயோ ச்சீ போ......"
இது காதல் துவங்கும்
அவள் வாழ்த்துப்பாடல்!

இசைக்கு
பெண்மயிலின் முத்த சத்தங்கள்!

இயற்கைக்கு எதிராய்
பூக்கும் நேரம்
இவ்வேளையின் ஒத்திகைக்கு!

சட்டென மாறிடும் வெப்பம்
வியர்த்தலுக்கு பொறுப்பேற்காது...
மாறாய் ஓவியம் தீட்ட
ரேகைகள் இந்நேர இறகுகள்!

அனுமதிக்கு ஒரு வெட்கமும்
அத்துமீறலுக்கு ஒரு வெட்கமும்
அவள் செய்துகொண்ட ஒப்பந்தம்!

புறந்தள்ளும்
ஆசைகளையெல்லாம்
வெட்கங்கள் ஆக்கிரமிக்க...

இன்னும்
வரையப்படலாம்
ஓராயிரம் தீண்டல்கள்!

- ரசிகன்


-------

நன்றி..
கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9506:2010-06-11-06-03-54&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

தனிமை
ஒரு பொழுதேனும் உணர்ந்ததில்லை...
உணர்த்தியிருக்கிறது...
நிரம்ப அவளும் அவளையும் மட்டும்!

கதையென அரங்கேறுமிடத்தில்
கவிதைக்களம் நட்பு....
கதாப்பாத்திரம் காதல்...

கவிதையின் நாயகன்
முன்பொரு நாள்....
காதலர்கள் வயப்பட்ட சுடுமண்ணில்...
தாகம் தீர்த்ததற்காக
நண்பனென கல்லெறியப்பட்டவன்...

காயங்கள் ஒரு பொருட்டல்ல...
கண்ணீர் ஆற்றிவிடுகிறது!

நினைவுகள் ஒன்று கூடுமிடத்தில்
மயானங்களும்
கதவை மூடிக்கொள்கின்றன...
நிம்மதியாய் கண்ணீர் வற்றிவிடுகிறது!

முடிவை
முன்னின்று நடத்த
இழுத்தடித்து சாத்தப்பட்ட மனதில்......
சாத்தான்
ஒரு கோப்பையிலும்
கூத்தாடி
மறு கோப்பையிலும்
தள்ளாட்ட தாண்டவம்!

- ரசிகன்

***

நன்றி,

திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31006066&format=html

***

கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9426:2010-06-07-08-13-52&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

முன்குறிப்பெழுதுவது
இக்கவிதை வாசிக்கும் பொருட்டு
வாசகனின் கவனத்தை ஒரு நிலைப்படுத்தல்...

இப்படியாக தொடங்கும்
கவிதை கருவில்
காதலை வசை பாடுவதாக
முன்னமே அறிவிக்கப்படுகிறது...

மூர்க்கத்தனமான முத்தமொன்றில்
மூச்சு வாங்கியபடி
அடுத்த பந்திக்கான வரிசையில்...

கூட்டம் சலசலப்பையும்
தனிமை சலனத்தையும்
இயல்பாகவே திணித்திருக்கிறது!

அடுக்கடுக்கான சத்தியங்கள்
பரிமாறப்படும் வேளையில்
எதிர்பாலின கவனம் ஈர்க்கப்படுவது
காதலை உறுதிசெய்வதாய் யூகிக்கலாம்!

இவ்வாறாக மலர்தல்
பூஞ்சோலை தோட்ட மறைவிலோ
இணைய தள மையங்களிலோ
பூப்பெய்தி விடுகின்றன!

வரைமுறைகள் தளர்த்தப்பட
அவனோ அன்றி அவளோ கூறுவதாய்

"அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்...
இப்போ போய்.. ச்சீ விடுடா"

என்பதுபோல் முடிவுபெறுகிறது
நான் வசை பாடிய காதலும்
நீங்கள் அசை போட்ட கவிதையும்!


நன்றி ,
கீற்று !
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9192:2010-06-02-12-36-35&catid=2:poems&Itemid=265
ரசிகன்!


எனதைந்தாம் சந்திப்பில்
அவள் தவற விட்டுச்சென்றது!
வெள்ளை நிறம் கொண்டது...

ஒரு ரோஜாப்பூ பூத்திருக்கும்
நாணமதை
எத்தனை முறை கசக்கினாலும்
மடிப்பாய் அமையப்பெற்றிருக்கும்!

அவள் உள்ளங்கை தாய்வீடு
வெட்கம் சிந்துமிடம் அந்தப்புரம்
கண்ணீரில் தாமரையிலை
காதல் கொண்டால் மறைபொருள்!

நேரம் காலமேதுமின்றி
வெட்கம் வந்து கதவு தட்டும்
மூடி மறைத்திட முடியாது
முடிந்து வைத்துக் கொள்வாள்!

ஆம்!

எனதைந்தாம் சந்திப்பில்
அவள் கொட்டிச் சென்ற
முதல் வெட்கத்தை கட்டியணைத்தபடி
கட்டில் துயில் காணும்
அவள் தவறவிட்ட கைக்குட்டை!

***

நன்றி!
யூத்ஃபுல் விகடன்
---
ரசிகன்!

*

*
சதுப்பு மேசையில்
காதல் முன்னோட்டத்திற்கான
ஊடல் கரைந்தோடுகிறது!

ஒரு மெல்லிய தருணமது...
அவள் இதழுக்கும்
உரசும் ஐஸ் கிரீமுக்கும்...

இதழ் ரேகைகளின்
நெளிவு சுளிவுகளில் தேங்கி இருந்தவை
நாவுக்கு ஏற்ப
மொழி மாற்றம் செய்யப்பட

மீதமுள்ள பிழைகளை
திருத்தம் செய்கிறாள்!

இதழ்கள்
முன்னமே வண்ணம் தீண்டப்பட்டன!

புருவங்கள்
கூர் தீட்டப்பட்டன!

மயிரிழைகள்
ஓரம் கட்டப்பட்டன!

முகத் தோரணை
முடிவு செய்தாகிவிட்டது!

இக்கணம்
முன்னும் பின்னுமாய் பார்த்து
யாரும் பொருள்பட விளங்காது

திருத்தங்கள் செய்யப்பட்ட
கலைந்தாடிய ஆடையுடன்

"நல்லா இருக்கேனா"
என்ற கேள்வியோடு
முடித்து வைக்கிறாள்...
என்னையும் இக்கவிதையையும்!!!

*
நன்றி
கீற்று!
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9163:2010-05-30-18-02-02&catid=2:poems&Itemid=265


ரசிகன்!



"

மழைக்காற்றின்
பின்னிரவுக்கு முன்பாக
காதல் திரவியங்கள் வாசம் தீட்டப்படுகின்றன
ஜன்னலின் விழி வழியோரம்!

சாரலென இதமாய்
மிதமாய் தூறும்வண்ணம்
மழலையின் முதல் முத்தம்
எச்சில் படர்ந்திருந்தது!

பதனிடப்பட்ட நாணங்கள்
துயிலெழும் தூரத்தில்
சலனங்கள் அர்த்தப்பட்டிருக்கக்கூடும்!

எதிர்பட்ட
கூச்சல்கள் மௌனித்துவிட
அங்குமிங்குமாய்
திட்டுத்திட்டாய் சில கூச்சக்கோடுகள்!

முன்னிரவுக்குப் பிறகான மிச்சத்தில்
முன்மொழிதல் அவளெனவும்
வழிமொழிதல் நானெனவும்

பின்னிரவுக்குப் பிறகான வெட்கத்தில்
தொடர மறுக்கும்
என் பேனா முனை!

- ரசிகன்

***

நன்றி ,
கீற்று!
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8937:2010-05-25-05-22-20&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

*

ஒவ்வொரு
காதலின் சட்டைப்பையிலும்
ஆயிரமாயிரம்
புண்பட்ட மௌனங்களும்
மேம்பட்ட சலனங்களும்
ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன!

அதில்
குறிப்பிடும்படியாக
குறிப்பெழுதும்படியாக

ஒன்றிரண்டு மட்டும்
அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு
பசியாற்றப்பட்டு விடுகிறது!

மீதம் எஞ்சியவை

ஒற்றை மரப்பட்டையிலும்
கோவில் உள் மதில்சுவரிலும்
கடற்கரையோர அலைபரப்பிலும்

காதலியின் பெயரென
அழகாய்
அழுத்தமாய் கிறுக்கப்படுகிறது!

***
நன்றி,
திண்ணை...
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005161&format=html


***
நன்றி,
உயிர்மை
*
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2931
ரசிகன்!

"
பயணத்தின்
பெயர் மற்றும் முகவரி
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!

மெல்லினம் அவளெனவும்..
வல்லினம் நானெனவும்,
முரண்பாடுகள் ஒன்றுவது போல்
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !

தோள் சாய்தல் பகிர்வதாகவும்
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!

இந்நெறிமுறைகளுக்குட்பட்டு
பாதைகள் தீர்மானப்பட..

நடுவானத்தில்,

பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள்

முடியாது நீளும்
என் பயணத்தில்
இன்று நட்பிற்குப் பதில்
தனிமை விரல்கள்!

-ரசிகன்!

***
நன்றி,
கீற்று!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8460:2010-05-11-13-01-53&catid=2:poems&Itemid=265
ரசிகன்!



"

சொல்ல வந்ததை
முதலில்
சொல்லிவிடுவதாக கூறி
மௌனம் பேசத் தொடங்குகிறாள்!

முன் பொழுதும்
முன்னெப்பொழுதும்
ஆரம்ப நிலை
இதுவாய்தானிருந்தது!

இன்றேனும்
சொல்லிவிடுவதை போல
உடல் மொழிகள்
அறிவித்தவண்ணம் இருந்தன!

பொறுமையிழந்த நேரம்
பின்
சந்திப்போம் என்றவாறு கடக்க

இவளும்
அடுத்தொரு நாள்
நமக்கானதாய் இருக்கிறதென்பதை
சொல்லாமல் சொல்லியவாறு
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு!


-ரசிகன்

***

நன்றி...
கீற்று!
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8362:2010-05-08-07-21-49&catid=2:poems&Itemid=265
ரசிகன்!


"

பிஞ்சு விரல்களின் பிடியில்
சிலேட்டு பரப்பில்
கரையத்தொடங்கும் பல்பம்!

அம்ம்ம்ம்ம்மா......
என உச்சரித்தவாறு
வட்டங்களை வரையும்
பல்ப முனைகள்!

முதலிரண்டு கண்ணாம்,
கீழ்
கொஞ்சம் நெளிந்தவாறு மூக்காம்,
அடுத்து
இரு கோணல் கோடிட்டு வாயாம்!

இது பொட்ட்ட்டு.....
என்றழுத்தியதில்
உடைபட்டுப்போனது
பல்பம் இரண்டாய்!

உயிரொன்று குறைகிறதென்று
பால்யத்தின் உச்சத்தில்
சிலேட்டில்
பதிக்கிறதொரு ஈர முத்தம்-

பல்ப துகள்களை
ருசிக்க தொடங்கியவாறு!

-ரசிகன்


நன்றி!!!
யூத்புல் விகடன்!
***
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem070510.asp
ரசிகன்!



"

மீண்டும் மீண்டும்
துண்டிக்கப்படும் அழைப்பு!

பேச விழையும் வார்த்தைகள்
ஒன்றோடொன்று
முட்டிக்கொள்ள
பதற்றமாய்....
அங்குமிங்குமாய் அலையும் மனம்!!!

அடைக்கலப்படுத்தல் சாத்தியமின்றி
மீண்டும்
இணைக்க விடுக்கும் அழைப்பு....

மாறாய் இம்முறை
அணைக்கப்பட...

சொல்லவந்தவை அனாமத்தையாய்!!!


-ரசிகன்
ரசிகன்!


"

ஒரு மஞ்சள் பூசிய
மாலைவேளை சந்திப்பில்...

வெள்ளுடை விலாவாரியாய் ...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்தவையும்!

பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடிசாய விழைந்தபடி நான்!

இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம் ,

சலித்துப்போயிருந்தன..
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்!


ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்!
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்..

பின் சற்று யோசித்தவளாய்..

சட்டென நெருங்கி,
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!!!

***

நன்றி
திண்ணை!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005027&format=html
நன்றி
உயிர்மை..
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2867
ரசிகன்!


*
விரல்களின்
இடுக்குகளில் ஊடுறுவியவாறு
கடந்து செல்கிறது சாலை...


ஒருபுறம் அவளும்
மறுபுறம் நாணமுமென
வாய் மொழிகளுக்கு வழி கொடுக்காது
அடைத்து செல்ல முயன்றபடி காதல்!


விழிகளின் பார்வைகளினூடு
புரிதலும் புணர்தலும்
பக்குவப்பட்டு பேசிக்கொள்ள


ஒரு வழியாய்
பற்றிக்கொண்டாள்
அழுத்தமாய் ஐவிரல்களை...!


மஞ்சம் அடைந்த மிகுதியிலும்
பேச வார்த்தை கிடைக்காது
மௌனம் மட்டுமே பயணிக்கிறது
விரல்கள் விடுபடும் தூரம் வரையில்!!


-ரசிகன்

நன்றி
திண்ணை!!!

*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004255&format=html
*
ரசிகன்!


"
காத்திருப்புகளின் பயணக்களைப்பில்
இளைப்பாரிக்கொண்டிருந்தன
அவள் சார்ந்த நினைவுகள்!!!

முத்தங்களை தாங்கிப்பிடித்தபடி
முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
நிலா வடிவ சுவர் கடிகாரம்...

அறை நெடுக
விழி படும் இடமெல்லாம்
குமிழும் அவள் கூந்தல் ஈரம்...

அவள் கொஞ்சல் மொழிகளை
மௌனமாய் உச்சரித்து விளையாடும்
அந்த தலையாட்டு பொம்மை...

மறுபுறத்தில்
விசிறியின் உந்துதலுக்கு
வெட்கமறியா சில காகிதங்கள்
ஒன்றை ஒன்று உரச
ஒரே கூச்சலும் குழப்பமுமாய்....

இடையிடையில்
காதல் வேட்கையில்
திட்டுத் திட்டாய் சில தணிக்கை வெட்டுக்கள்...

உதறி எழுந்து
இயல்பு நிலைக்கு திரும்புகையில்...

கலவரமறியாது
இசையெழுப்பிக் கொண்டிருந்தது
ஜன்னலின் திரைசீலை....

-ரசிகன்

-----------------

நன்றி!
கீற்று...


---> http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6882:2010-04-25-04-20-18&catid=2:poems&Itemid=265
ரசிகன்!

"
பார்வைகள்
சரிந்து விழ...
வெட்கங்களாய் பூத்து எழுகிறாய்....

வெட்கத்தில்...

பேச வந்த வார்த்தைகள்
இதழ் தொட்டுவிட்டு
வந்த வழி செல்லும் உன் கழுத்தோடு
என் பார்வையும் செல்ல

ஆடை சரி செய்கிறாயே
இதில் நியாயம் என்னடி?
ரசிகன்!


அடியே...

உன்னில்
காதல் சொன்ன போது...

வார்த்தைகளை முழுங்கிவிட்டு

நிமிர்ந்து
ஒரு முறைப்பும்

குனிந்து
ஒரு வெட்கமும் தருகிறாயே...

இதை
நான் எப்படி எடுத்துக்கொள்ள?
ரசிகன்!

இருட்டணைத்த மொட்டைமாடியில்
முதலில்
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்
போரிட எத்தனித்திருந்தது!
மின்னல் வேகத்தில்
மடிந்து போனது
மற்ற மீன்களுக்கு
ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்!

சீற்றத்துடன்
வெள்ளொளியை கக்கியவாறு
ஆணவத்துடன் முதல் அடி எடுத்துவைக்கிறாள்
வெண்ணிலா!

பின்னடி வைக்காமலே
விண்மீன்கள் ஒன்றுவிடாமல்
பின்வாங்கி கொண்டன!

நீயா நானா என்ற
தீர்மானம் கொண்டு
அவள் நெருங்கிவரவும்

என்னவள்
தலை சுற்றியிருந்த
நூலாடை மெல்ல நழுவவும்
சரியாய் இருந்தது!

தோற்ற பொலிவில்
தோற்றுப்போனவள்
ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்
மேகமூட்டத்தினூடே!

-ரசிகன்!

நன்றி வார்ப்பு!!!
http://vaarppu.com/view/2143/
ரசிகன்!

அது
அவளாய் தான் இருக்கக்கூடும்!

ஆழ் நித்திரையில்
மெல்லிய இழைக்காற்று
கவிதை பேசுவதும்,

நினைவுகளை கையகப்படுத்தி
கனவுகளை திரை போடுவதும்,

போர்த்திய போர்வையை
கால் மாட்டில் இழுத்துவிடுவதும்,

நிச்சயம்
அவளாய் தான் இருக்கக்கூடும்!

நாளை
எப்படியும்
அவளிடம் சொல்லிவிடுவதென்ற
தீர்மானத்தோடு
ஒவ்வொரு இரவும் விடைபெறுகிறது!


-ரசிகன்!
.

நன்றி....
யூத்ஃபுல் விகடன்!!!
.
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem120410.asp