ரசிகன்!



எப்படியும்

தன் கைகளால்

முகத்தை மூடிக்கொள்வாள்

என் பார்வைக்கு!


அவள் கைகளை விலக்குவதா..?

என் பார்வையை விலக்குவதா?


சிவந்து போகும் வெட்கத்தில்

அவள் இருப்பாள்...

ஏமாந்து போகும் ஏக்கத்தில்

நான் இருப்பேன்!


எப்படியும்

ஒரு விரல் இடுக்கில்

எட்டிப்பார்த்திடுவாள்...

நிலாக்கள் சட்டென வழுக்கி விழும்!


நான் சுதாகரித்துக்கொள்ள

அவள் தலை குனிந்து விடுவாள்...


அவள் கன்னங்களை கிள்ளி

அப்படியே அள்ளிக்கொள்ளுதல்

அலாதி ப்ரியம் எனக்கு!


-ரசிகன்


நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311010215&format=html


*
3 Responses
  1. Unknown Says:

    வாவ்...கவிதை அருமை




Post a Comment