ரசிகன்!


மடிக்கணினியின்
நீர்ம படிக உருகாட்டியில்
நிலா திரவியமென
படர்ந்திருக்கிறாய்...

என் தலையணையின்
மேடுக்கு ஈடு கொடுத்தாற்போல
சமன்படுத்தப்பட்டிருக்கிறது
நம் முகங்கள்!

மோனலிசாவுக்கு
அடுத்தபடியாக
ஒரு இனம் புரியா
புன்னகை கொடுப்பவள்
நீ
ஒருத்தியாகத்தான் இருக்கக்கூடும் எனக்கு!

உன் இமைகள் அசைந்தபாடில்லை.,
கூர் தீட்டிய பார்வையில்
எனை குடைந்து ஊடுருவுகிறாய்...
கிறங்கிக் கிடந்த
ஏதோ ஒரு உயிரணுவை
உரசி சென்றிருக்கக்கூடுமென்பது
என் கணிப்பு...

கணினி
அயர்ந்து தூங்கிவிடும்
நிலையில்லா ஒரு கணத்தில்
உன் மேனி புகுந்து
புதைந்து விடத் தோன்றி விடுகிறது!



நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12962:-143&catid=2:poems&Itemid=265



*
4 Responses
  1. அருமையாக இருக்குதுங்க...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..


  2. நன்றி சுதா :)


  3. மிக அழகான வரிகள் !!!!


  4. நன்றி kayalvizhi :-)


Post a Comment