ரசிகன்!


பின்னிரவுகள்.,
ஒரு நாள் கணக்கு
நமக்கு!

நம்முலகை
இவ்விரவுகள் தத்தெடுத்திருப்பதாக
தொலைப்பேசிகள் பேசிக்கொள்கின்றன!

என்ன தொடங்கினோம்?
ஹ்ம்ம் என்பதாகவே
முடிவுறுகிறது உரையாடல்கள்!

பல
கணம் கடந்த காதலை
காமத்தின் ஒற்றை சொல்லில்
திணித்து வைத்திட
எண்ணமில்லை இருவருக்கும்!

காதல் தான்
நம்மை பேசிக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை காதலித்துக்கொண்டிருக்கிறது!

உன்னை
தூங்க வைப்பதாய் நானும்
என்னை
தூங்க வைப்பதாய் நீயும்
ஒவ்வொரு பின்னிரவிலும்
தோற்றுப்போகிறோம் சேவலின் கூவலில்!


-ரசிகன்

நன்றி
கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13107:2011-02-19-11-59-30&catid=2:poems&Itemid=265

நன்றி
அதீதம்
http://www.atheetham.com/iravukalam.htm
*
2 Responses
  1. உன்னை
    தூங்க வைப்பதாய் நானும்
    என்னை
    தூங்க வைப்பதாய் நீயும்
    ஒவ்வொரு பின்னிரவிலும்
    தோற்றுப்போகிறோம் சேவலின் கூவலில்!////


    கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html


  2. நன்றி
    வேடந்தாங்கல் - கருன் :-)


Post a Comment