ரசிகன்!


வலிகளின்
கூர்மையில் கசியும்
ஒரு துளி கண்ணீர் காட்சி...
சாட்சியும் கூட!

மெதுவாய்
விழிகளை ஈரமாக்கி
இமைகளின் வரப்பில்
ஒரு கணம் தேங்கி நிற்கிறது!

சுதாகரித்துக்கொள்ள
போதிய நேரமில்லை...
பிளந்து விழுகிறது
கன்னப்பரப்பில்!

வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!

மொத்த வலிகளையும்
ஈரமாக்கி
ஒரு நீர் உருண்டையாக்கி
தாடையின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு துளி மட்டும்!

-ரசிகன்
நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://new.vikatan.com/article.php?aid=3226&sid=98&mid=10


*
0 Responses

Post a Comment