ரசிகன்!



அர்த்த ராத்திரியின்
ஒரு வெண் புள்ளியில்
படர்ந்திருக்கிறது என் வானம்...

மூன்றாம் பாலினத்து இசையோடு
மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது
என் உலகம்!

பரவசங்கள் நிரம்பிய
உன் வருகையை
சிலாகித்துக்கொண்டிருக்கின்றன
என் அறை வாசமும்
சுவர் குறிப்புகளும்!

அவ்வளவு எளிதாய்
தொடங்க முடியாத கவிதையை
எவ்வளவு சுருக்கமாய்
முடித்து விடுகிறது உன் தீண்டல்...

இதோ...
அடங்கிடாத அவ்வழகை
என் மூன்றாம் சாமத்து நாடி நரம்புகள்
வரையத் தொடங்கிவிட்டன!

வண்ணம் தீட்டிட
ஒற்றை காலில் நிற்கிறது இரவு!"


- ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311040315&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
0 Responses

Post a Comment