ரசிகன்!
சிகரெட் நெடியில்
பிரிபடுகிறது மனம் இரண்டாய்...
ஒன்றில் அவளும்
மற்றொன்றில் அவள் மட்டும்!

என்னை வெறித்துப் பார்க்கும்
இந்த அணில் பிள்ளைக்கு
உன்னை நினைவிருக்கலாம்...
அந்தளவுக்கு கொஞ்சியிருக்கிறாய்...

காற்றில் உதிர்ந்து கிடக்கும்
இந்த பூக்களுக்கும்
உன்னை நினைவிருக்கலாம்...
ஒவ்வொன்றுக்கும்
ஒரு முத்தம் வீதம் வெட்கப்பட்டிருக்கிறாய்...

நீ இருந்திருந்தால்
நாம் கொள்ளை போன
அத்தனை தருணங்களையும்
கதை பேசி இருக்கலாம்...

சுவாசப்பை சூடேறுகிறது...
புகையிலையின் வாசம் போய்
பஞ்சு வடிகட்டியின் நாற்றம் அர்த்தப்படுகிறது!

மீள முயற்சிக்கும்
மற்ற நினைவுகளுக்கு ஒரு சூடு!

- ரசிகன்


நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13924:2011-04-01-11-50-58&catid=2:poems&Itemid=265
0 Responses

Post a Comment