என்னை
கடந்து செல்லும்
பெண்ணவள் தோழிக்கூட்டமும்
தேரோட்டம் தான்!
யாரிந்த பெண்ணோ
கதை பேசி நடக்கின்றாள்...
என்னுடலில் கை தீண்டாமல்
உயிர் கொன்று போகின்றாள்...
முட்டும் சாலை வளைவில்
முகம் திருப்பி
என்னுயிர் தூக்கி எறிகின்றாள்!
அப்பக்கம் வந்த
பட்டாம்பூச்சி
எனை பார்த்து கேட்கிறது...
அலட்டிக்கொள்ளாத
ஒரு அழகு..
மடிப்பு கலையாத கைக்குட்டை
சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு...
யார் அந்த தேவதை???-
ரசிகன் நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311051517&format=htmlரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*

அதிகாலை
தேநீர் கோப்பைக்கும்
சாயுங்கால மதுக்கோப்பைக்கும்
இடைப்பட்ட குக்கிராமம் எனது!
வற்றிப்போன இதயங்கள்
குடியிருக்கும்
மிக விசாலமான தெருவில்
இடதுபக்கம் என் வீடு...
முற்பொழுதொன்றில்
அவள் பார்வை பட்ட
ஒதுக்குப்புறத்தில் எனதறை...
அலங்கோலமாய் தானிருக்கும்
குப்பை இருக்காது!
அதில்
நான்கு பேர் மொத்தம்...
ஒரு நான்,
ஒரு பொய்,
ஒரு வால் அறுபட்ட கனவு,
மற்றுமொரு துணையிழந்த நினைவு!
பின்னிரவுகளில்
ஜன்னல் வழி வரும்
நிலா,
மற்றும் பூனைக்குட்டி கணக்கில் இல்லை!
- ரசிகன்நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311050814&format=html.
ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

<3

யுத்த களத்தின்
புழுதியில் நசுக்கப்படுகிறது
என் இரவுகள்!
சுட்டெரிக்கும் நிலவில்
பரிமாறப்படும் நிழலில்
நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!
மந்திரக்காரியாகவே
தந்திரங்களை முன் வைக்கிறாய்!
சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
நிர்வாணமாகிறது எனதறை!
நிபந்தனையோடு
கரையத் தொடங்குகிறாய்...
வெற்றியில் பாதியும்
தோல்வியில் பாதியும் எனக்கு!
அச்சத்தின் வாடையோடு
களமிறக்கப்படுகிறது
கூர் தீட்டப்பட்ட வாளோடு புரவி!-
ரசிகன்நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311043018&format=htmlரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*
முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஓர் உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...
மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!
நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?
அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!
அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...
பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?
ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...
என் ரெண்டுங்கெட்டா மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில்...
அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!-
ரசிகன்நன்றி
யூத்ஃபுல் விகடன்!
http://new.vikatan.com/article.php?aid=5290&sid=151&mid=10நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13488:2011-03-10-10-21-09&catid=2:poems&Itemid=265ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

*