ரசிகன்!
*

காத்திருப்பில்
நிலவிழந்தவளாய்

தேகம் தொட்ட
இலை மேல் கோபம் அவளுக்கு!

காம்பினை விரல் நுனியிலும்
நுனியினை இதழ் மறைவிலும்
பற்கள் இலகுவாய் மெல்ல
அவ்விதழ் உரசிய எச்சிலின்
எங்கோ ஒரு மூலையில்
எனதுயிர் நனைத்துவிடுகிறாள்!

***

நன்றி
உயிர்மை / உயிரோசை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3234