ரசிகன்!
*
எனக்கு
இன்னும் புரியவே இல்லை...
நீ
பூக்கடைக்கு என்ன வாங்க சென்றாய்;
கோயிலில்
யாரை கும்பிட்டு நின்றாய் என்று?!

. * .
உன் பெயர் தெரியாததால் தான்.,
பொத்தாம்பொதுவாய்
சொல்லிவிட்டு போகிறான் குடுகுடுப்புக்காரன்-
'இந்த வீட்டுக்கு
மகாலட்சுமி வர போறா' என!

. * .
தேவதைகள்
வானிலிருந்து தான் வருவார்கள் என்றில்லை...
உன்னை போல
வீட்டிலிருந்து கூட வருவதுண்டு!

. * .
சரியாய்
மாலை 5 மணிக்கு
வர சொல்லியிருந்தாள்...

கொஞ்சம்
அரை மணி நேரம்
முன்னதாகவே சென்ற என்னை
"சீக்கிரம் வர மாட்டியா?" என்று
கோபித்துக் கொண்டவளை
என்ன சொல்ல?

அவ்வளவு காதல்...
அவ்வளவும் காதல்!

. * .
எப்போதும்
தேவதையாய் தெரிகிற நீ..,
நான் மற்ற பெண்களோடு பேச மட்டும்
பேயாட்டம் ஆடி விடுகிறாய்!

. * .
இராப்பொழுதுகளில்
உன் கண்கள் மின்மினிப் பூச்சிகள்;
மற்றபடி வெட்டுக் கிளிகள்!

. * .
- ரசிகன்
. *