ரசிகன்!



மனித வர்க்கத்தின்
மாமிச மனதை
கலவரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடும்
மூலையில் ஒரு காதலும்
முடுக்கில் ஒரு காமமும்!

எவனும் தப்பிப்பதாயில்லை...
அவளிடத்தில்
குற்றவாளியாய் சரணடைவதை விட
வேறு பேறும் பெரிதில்லை...

எவளும் சிக்குவதாயில்லை...
அவனிடத்தில்
காதலியாய் முன்மொழிவதை விட
வேறு காரணி தேவையில்லை..

காமமும் காதலும்
ஒன்று கூடும்
ஒரு வேதியியல் திருவிழா!

நிலவின் மகரந்த வீச்சில்
பூக்களின் விரிப்பில்
அவள் மார்போடு
அவன் ஊர்ந்து சாய்ந்தாட

ஒரு மனிதன்
காதல் என்கிறான்..
ஒரு மனிதன்
நண்டூருது நரியூருது என்கிறான்!


-ரசிகன்


நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2477/


*
ரசிகன்!


தாளத்துக்கேற்ற நடனம்
வசிய பார்வை
விஷம புன்னகை
மழலை பேச்சு…

அடிமை பட்டுக்கிடக்கும்
ஒரு ரசிகனாய்
நீ ரசிக்க
பட்டாம்பூச்சிகளுக்கு வலிக்க வலிக்க
பிடித்துத் தருகிறேன் காதலாய்…

கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க
சிறகில் ஒன்று உடைந்து போகிறது…
அருவருப்பாய் தூக்கி எறிகிறாய்
அதிலிருந்த சிவப்பொன்று
என் முகத்தில் தெறிக்க

வண்ணமா ரத்தமா?
பாவத்தின் அச்சத்தோடு
தலையில் கை வைத்தமர்கிறேன்!

சாக துடிக்கும் அப்பூச்சியின்
கன்னங்களை அள்ளி பார்த்திட
அதன் மர்ம புன்னகை
என் முகத்தில் அறைந்து இறக்கிறது..
கண்ணீர் சிலுவையில் நான்!

- ரசிகன்

நன்றி
திண்ணை
http://puthu.thinnai.com/?p=924

நன்றி
விகடன்

*
ரசிகன்!


என் கரத்தை
இறுக்கப் பிணைத்து
உரக்கச் சொல்லியிருக்கிறாய்
நான் நீ என்றும்
நீ நானென்றும்!

பேசி தீர்க்க வேண்டிய
சில மனஸ்தாபங்களையும்
சொல்லி புரிய வைக்க வேண்டிய
சில உணர்வுகளையும்
ஒரு காதல்
மற்றுமொரு அகங்காரம்
ஒடுக்கி வைத்திருப்பதென்னவோ
அப்பட்டமான நிஜம்!

இணைய உரையாடல்களில்
நீ ஒளிய வேண்டியதில்லை...
தொலைப்பேசி அழைப்புகளை
நீ துண்டிக்க வேண்டியதில்லை...
சமூக வலையமைப்புகளில்
எனை நீக்க வேண்டியதில்லை!

நான் ஆணென்ற
ஒரு செருக்கும் உண்டெனக்கு!

நீ
தாழிடாமலே தூங்கலாம்...
இனியும் தட்டுவதாயில்லை
புறக்கணிப்பின் கதவுகளை...!


- ரசிகன்

நன்றி,
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14767:2011-05-22-17-50-11&catid=2:poems&Itemid=265



*
ரசிகன்!


என்னை
கடந்து செல்லும்
பெண்ணவள் தோழிக்கூட்டமும்
தேரோட்டம் தான்!

யாரிந்த பெண்ணோ
கதை பேசி நடக்கின்றாள்...
என்னுடலில் கை தீண்டாமல்
உயிர் கொன்று போகின்றாள்...

முட்டும் சாலை வளைவில்
முகம் திருப்பி
என்னுயிர் தூக்கி எறிகின்றாள்!

அப்பக்கம் வந்த
பட்டாம்பூச்சி
எனை பார்த்து கேட்கிறது...

அலட்டிக்கொள்ளாத
ஒரு அழகு..
மடிப்பு கலையாத கைக்குட்டை
சிவப்பு சாயம் பூசிய சிரிப்பு...

யார் அந்த தேவதை???


- ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311051517&format=html



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
ரசிகன்!




அதிகாலை
தேநீர் கோப்பைக்கும்
சாயுங்கால மதுக்கோப்பைக்கும்
இடைப்பட்ட குக்கிராமம் எனது!

வற்றிப்போன இதயங்கள்
குடியிருக்கும்
மிக விசாலமான தெருவில்
இடதுபக்கம் என் வீடு...

முற்பொழுதொன்றில்
அவள் பார்வை பட்ட
ஒதுக்குப்புறத்தில் எனதறை...
அலங்கோலமாய் தானிருக்கும்
குப்பை இருக்காது!

அதில்
நான்கு பேர் மொத்தம்...
ஒரு நான்,
ஒரு பொய்,
ஒரு வால் அறுபட்ட கனவு,
மற்றுமொரு துணையிழந்த நினைவு!

பின்னிரவுகளில்
ஜன்னல் வழி வரும்
நிலா,
மற்றும் பூனைக்குட்டி கணக்கில் இல்லை!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311050814&format=html

.
ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


<3
ரசிகன்!




யுத்த களத்தின்
புழுதியில் நசுக்கப்படுகிறது
என் இரவுகள்!

சுட்டெரிக்கும் நிலவில்
பரிமாறப்படும் நிழலில்
நீ நீயாக காட்சியளிப்பதில்லை எனக்கு!

மந்திரக்காரியாகவே
தந்திரங்களை முன் வைக்கிறாய்!
சுவாரசியங்களை கவிதை எழுதுகிறாய்!
நிர்வாணமாகிறது எனதறை!

நிபந்தனையோடு
கரையத் தொடங்குகிறாய்...
வெற்றியில் பாதியும்
தோல்வியில் பாதியும் எனக்கு!

அச்சத்தின் வாடையோடு
களமிறக்கப்படுகிறது
கூர் தீட்டப்பட்ட வாளோடு புரவி!


- ரசிகன்

நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311043018&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
ரசிகன்!


முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஓர் உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!

நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?

அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!



அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...

பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?

ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...

என் ரெண்டுங்கெட்டா மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில்...

அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!


-ரசிகன்

நன்றி
யூத்ஃபுல் விகடன்!
http://new.vikatan.com/article.php?aid=5290&sid=151&mid=10


நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13488:2011-03-10-10-21-09&catid=2:poems&Itemid=265


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
ரசிகன்!


தன்னை அறியாது
நீ முன்னிலை படுத்தப்படுகிறாய்
நினைவு ரோட்டில்....

இரு புற சாலையோர மரங்கள்
உன்னை
கண்பொத்தி அழைத்து செல்கின்றன...
ஊர்திகள்
உன் காது பொத்தி வைத்திருக்கின்றன!

டயர் பஞ்சர் ஒட்டும் கடையில்
முகவரி விசாரிக்கிறாய்...
கிட்டத்தில் இருக்கும் தேநீர் கடைக்கு...

இடம் நெருங்கியதும்
தனிமை படுத்தப்படுகிறாய்...
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்...
அடுத்து ஒரு தேநீர்...
கூடவே ஒரு சிகரட்!

புரியாத தெளிவோடு
இன்றைய செய்தித்தாளை புரட்டுகிறாய்...
பக்கத்துக்கு பக்கம்
உன்னை தொடர்புபடுத்தியே இருக்கிறது
எல்லா செய்திகளும்!

தற்கொலை...
அகால மரணம்....
காணாமல் போனவர் பற்றிய குறிப்பு...!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31104247&format=html



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!



தொலைதூர மௌனங்கள்
நம்மை சடலங்கலாகவே பாவித்து
சுமார் மூன்றரை ஆண்டுகள்!

ஒன்றும் புதியதாய் சொல்வதற்கில்லை.,
சராசரி ஆண் பெண் நட்புதான்
எனினும்
கொஞ்சம் கூடுதலாகவே
கவனிக்கப்பட்டிருக்கிறோம் நம் வட்டத்தில்!

குறைந்தபட்ச நம் வாழ்வை
சுறுக்கமாய் சொல்வதென்றால்....
வகுப்புகள் திருடி
சாலையோரம் வைத்தோம்...
நேரங்கள் கழிக்க
சண்டையிட்டே தொலைத்தோம்...
அதிகபட்ச விளைவு நட்பு!

காதலெனும் காந்தப்பறவை
உன்னை கவர்ந்து தூக்கிப்போக
உலகப்பார்வையில் நான் வேற்றுகிரக வாசி!

இடைவெளிகளும் களைத்துப்போக
தாமாகவே முன்வந்தாய்
ஒரு மன்னிப்போடு
ஒரு நலம் விசாரிப்போடு!

அரைமணி நேர உரையாடல்
நீ முடித்துப்போக
நான் மீண்டுமொரு முறை வாசிக்கிறேன்...

உன் அம்மாவின் காரக்குழம்பு
என் நாவை இனித்துப்போவதை
மறுப்பதற்கில்லை!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041710&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!


இணைந்தொருவன் இயங்கும் கூட்டத்தில்
அகாலமாய்
தனித்து விடப்பட்டிருக்கிறது இதயம்!

எவனுடையதும்
எவளுடையதும்
பிடிமானம் இருப்பதில்லை
அதன் விரல் பிடிப்பில்...

யார் நீங்கள்?
எங்கு நிற்கிறேன்?
எங்கு செல்லப்போகிறேன்?
முகவரிகளற்ற உலகத்தில்
விடைகள் எதையும்
தெளிவாய் சொல்லத்தெரியவில்லை எனக்கு!

சிலவற்றை
வாய் கூசாமல் சொல்லிவிடலாம்...

இன்னுமொரு காதல்,
இன்னுமொரு புணர்வு,
இன்னுமொரு வோட்கா!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311041016&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!
சிகரெட் நெடியில்
பிரிபடுகிறது மனம் இரண்டாய்...
ஒன்றில் அவளும்
மற்றொன்றில் அவள் மட்டும்!

என்னை வெறித்துப் பார்க்கும்
இந்த அணில் பிள்ளைக்கு
உன்னை நினைவிருக்கலாம்...
அந்தளவுக்கு கொஞ்சியிருக்கிறாய்...

காற்றில் உதிர்ந்து கிடக்கும்
இந்த பூக்களுக்கும்
உன்னை நினைவிருக்கலாம்...
ஒவ்வொன்றுக்கும்
ஒரு முத்தம் வீதம் வெட்கப்பட்டிருக்கிறாய்...

நீ இருந்திருந்தால்
நாம் கொள்ளை போன
அத்தனை தருணங்களையும்
கதை பேசி இருக்கலாம்...

சுவாசப்பை சூடேறுகிறது...
புகையிலையின் வாசம் போய்
பஞ்சு வடிகட்டியின் நாற்றம் அர்த்தப்படுகிறது!

மீள முயற்சிக்கும்
மற்ற நினைவுகளுக்கு ஒரு சூடு!

- ரசிகன்


நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13924:2011-04-01-11-50-58&catid=2:poems&Itemid=265
ரசிகன்!



அர்த்த ராத்திரியின்
ஒரு வெண் புள்ளியில்
படர்ந்திருக்கிறது என் வானம்...

மூன்றாம் பாலினத்து இசையோடு
மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது
என் உலகம்!

பரவசங்கள் நிரம்பிய
உன் வருகையை
சிலாகித்துக்கொண்டிருக்கின்றன
என் அறை வாசமும்
சுவர் குறிப்புகளும்!

அவ்வளவு எளிதாய்
தொடங்க முடியாத கவிதையை
எவ்வளவு சுருக்கமாய்
முடித்து விடுகிறது உன் தீண்டல்...

இதோ...
அடங்கிடாத அவ்வழகை
என் மூன்றாம் சாமத்து நாடி நரம்புகள்
வரையத் தொடங்கிவிட்டன!

வண்ணம் தீட்டிட
ஒற்றை காலில் நிற்கிறது இரவு!"


- ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311040315&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!


புணர்ந்து கிழித்த அசதியில்
தாமதமான விடியலை
வஞ்சத்தில்
மல்லாக்கப்போட்டு திணிக்கிறது
ஒரு வரையறை இல்லா வித்தை!

மெய் சிலிர்க்க தீண்டிய
பட்டாம்பூச்சி ஒன்று
கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து
அரிப்பெடுக்க...

இரவுகளை நிராகரித்து
வெயிலில் நிற்கிறது
வாழ்வு சபிக்கப்பட்ட
ஐநூறு ரூபாய் நிலவொன்று!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31103275&format=html



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!
Submit button


*
ரசிகன்!


நலம்..
நலமறிய அவா!

நினைவிருக்கிறதா?
அன்றொரு மழை நாள்
கையில் நினைவோடு
என் வாசற்படியில் உன்னை கப்பல் விட்டது?

நீ
நனைந்தபடியே பேசிக்கொண்டிருந்தாய்...
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்க
தேநீர் உனக்கு காது கொடுத்திருந்தது!

மழை விட்ட கொஞ்ச நேரத்தில்
இரவு பொழிய
சாத்தப்பட்டன பகற்கதவுகள்...

நீ கண்களை மூடிக்கொள்ள
நான் கனவுகள் தேடினேன்...
நிகழ்வுகளற்ற அவ்வுலகத்தில்
நீ, நான், மௌனம் மற்றும் தனிமை!

என் மிக நெருக்கமானவையும்
என் மிக பிடிக்காதவையும்
அவை இரண்டு!
மரியாதைக்கு கூட
சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்...

நாளை நீ சந்திக்க நேர்ந்தால்
அவைகளை கேட்டதாக மட்டும் சொல்!

நினைவுகளுடன்,
ரசிகன்


நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13717:2011-03-21-16-17-46&catid=2:poems&Itemid=265



ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button


*
ரசிகன்!


தலை நசுங்கிக்கிடந்தவனின்
செருப்பொன்று
சாலையை வெறித்துக்கொண்டிருக்க
ரத்தம் உறைந்த தார் ரோட்டை
தேய்த்துக்கொண்டிருக்கின்றன
மரணம் சுற்றும் சக்கரங்கள்!

மாண்டவனின் கடைசி நிமிட
முனகல்களை
பதிவு செய்ய தவறிவிட்டன
வண்டிகளின் ஹாரன் சத்தமும்
ஆம்புலன்ஸின் சைரன் சத்தமும்!

நிராசைகளாய் போய்விட்ட
வாழ்க்கையின் இறுதிப்படிவம்
சொந்தக்காரனின் கையெழுத்துக்காய்
பிணவறையின் வரவேற்பறையில்...

மீண்டும் பருகத்துடிக்கும்
மரணத்தின்
சாலையை ஒட்டிய மரத்தடியில்
அவன் கனவுகள்
அனாதையாய் விசும்பும் சத்தம்
என்னை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது!

கவனமாய் செல்லுங்கள்!

-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311032012&format=html


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button



*
ரசிகன்!


மௌனங்கள்
என்னை அறைகிற போதெல்லாம்
என் கோவத்தை
சுவரில் முட்டியோ
யாருமற்ற அறையில் கத்தியோ
தணிந்து விடுகிறேன்!

நீங்கள்
எறிந்து விட்டுப்போகும் தனிமைக்கு
என் வீட்டு கெவுளியும்
பக்கத்து வீட்டு குடும்ப சண்டையும்
தற்காலிக சிநேகம்!

பூஜ்ஜியத்தில்
அர்த்தப்படுகிற என் வெற்றிடத்தை
எதை கொண்டு நிரப்ப?

விண்ணளவு காகிதத்தில்
கடலளவு மை கொண்டு
எழுதி கிழித்துவிடலாம்
ஒற்றை இரவில்....

எழுத எடுத்த பேனாவின்
கருங்குப்பியினுள்
உறைந்து கிடக்கும்
தனி”மை”யின் நாற்றம்
ஒரு வித
போதையினை திணித்து விட

இன்றெழுத விட்டதை
நாளை எழுதிக்கொள்கிறேன்!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311031310
&format=html


*

நன்றி
அதீதம்
http://www.atheetham.com/kavithai.htm


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button



*
ரசிகன்!


மறக்காமல்
வாங்கி வர சொல்லியிருக்கிறாள்
ஒரு டைரிமில்க் சாக்லேட்டும்
டெட்டி பியர் பொம்மையும்!

நான்குமுனை சந்திப்பின்
சிக்னல் நிறுத்தத்தில்
நீ என்னை பார்த்ததை
நான் பார்க்காமலில்லை....

உன் மகளின்
தலைக்கோதியபடி
செயற்கையாய் பேசிக்கொண்டிருந்தாய்
உன் கணவனோடு!

என்
கையில் இருந்தவை
நிச்சயம் அறிமுகப்படுத்தியிருக்கும்
என்னை உனக்கு!

உனக்கு மிகப்பிடித்தது
எப்படி
என் மகளுக்கும்
பிடித்துப்போனது என்பதில் தான்
விடையேதும் கிட்டவில்லை எனக்கு!


-ரசிகன்

நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13371:2011-03-06-22-12-23&catid=2:poems&Itemid=265


ரசிகன் பக்கங்களை டவுன்லோட் செய்ய இப்படத்தை சுட்டவும்!

Submit button



*
ரசிகன்!
ரசிகனின் iPhone செயலி அறிமுகம்!

To download this from App store , click here!

Submit button

வணக்கம்!

சட்டென தொட்டு விட்டேன் நூறாவது பதிவை.... இன்னும் சரியாய் சொல்லப்போனால் ரசிகன் பிறந்து 6 வருடமாகிறது!

எழுதி முடித்தாகி விட்டது 99 கவிதைகளை ....
கவிதைகள் என்பதை விட... என் ஆசை, கோவம், சந்தோஷம், சோகம், தனிமை, காதல், நட்பு முதலான கலவைகளின் தமிழ் மொழி ஊட்டிவிட்ட ஒரு வாய் சோறு!

எனது மிக சராசரியான வாழ்வில் ஏற்பட்ட ஒரு தற்காலிகமான வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு ஊடகம் தான் இந்த ரசிகன் பக்கங்கள்!

சில நாட்களாகவே ஒரு தொகுப்பினை வெளியிட வேண்டுமென்ற ஒரு ஆவல் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது.... ஆனால்... இன்னும் என் படைப்புகளின் மீது ஒரு முழு மன திருப்தி எற்படாமலிருக்கிறது! இன்னும் நிறைய எழுத வேண்டும், கற்க வேண்டும், வாசிக்க வேண்டும், அனுபவப்பட வேண்டும் என்கிற எண்ணம் நிறைவேறும் பட்சத்தில் அதற்கான முயற்சியில் இறங்கி விடலாம்!
இருப்பினும்... வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டினை சாதகமாக்கி...
ரசிகன் 'RASIGAN' எனும் செயலி(Application) உருவாக்கப்பட்டு எனது கவிதைகளை உலகளவில் உலவ விட்டிருக்கிறேன்!

iPhone / iPad பயன்படுத்துபவர்கள் இந்த முகவரியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்! இச்செயலி மாதந்தோறும் புதுப்பிக்கப்படும்!

நன்றிகள்...



இந்த பக்கங்களை நிரப்ப... என் பேனாவை விட அப்பேனாவுக்கு மை ஊற்றியவர்களுக்கு தான் என் நன்றிகளை குவித்து வைத்திருக்கிறேன்!
*திரு. இளங்கோ (கவிதைக்காரன் டைரி)
*திரு. கலாசுரன்
*திரு. ஆறுமுகம் முருகேசன்

இவர்களன்றி இன்று ரசிகன் உருவாகி இருக்க முடியாது! எனது படைப்புகளை தொடர்ந்து வாசித்து, விமர்சனமளித்து, ஊக்கமளித்து வரும் என் தோழர்/தோழிகளுக்கு கோடானு கோடி நன்றிகள்...
குறிப்பிடும்படியாக திருமதி. ஷம்மி முத்துவேல், கவிதா ரவீந்தர்!

கடைசியாக...
எனது படைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்து வரும்
கீற்று , திண்ணை , விகடன் , வார்ப்பு , உயிர்மை , அதீதம்
இணைய இதழ்களுக்கு என் நன்றிகளும், வாழ்த்துகளும்!

-ரசிகன்
Labels: , 14 comments | | edit post
ரசிகன்!


வெறுமன
பூக்கள் மட்டுமே
நிறைந்திருக்கும் காடு...

செங்குத்தான
ஒரு மர இடுக்கில்
வேட்டையாட காத்திருக்கும்
உங்களின் யூகங்கள்!

யாரும் நுகர்ந்திடாத
வாசம் கொண்ட
கவிதைகள்
சறுக்கலான பாதைகளில்
வெட்கி ஜீவித்திருக்கும்...

கனவு தேவதைகள்
கருத்தரித்து
விட்டுச்சென்றவையாய் இருக்கலாம்...

பிறந்த பசியில் அழும்
ஒவ்வொரு பத்தியையும்
உயிர் உருவம் அற்ற
ஒவ்வொரு காதலிகள்
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!

அவள்கள்
மிக பரிச்சயமான
முகமாகவும் இருக்கலாம்...
உலகம் கண்டிடாத
ஏவாளாகவும் இருக்கலாம்!

-ரசிகன்

நன்றி
வார்ப்பு
http://vaarppu.com/view/2384/



*
ரசிகன்!


வலிகளின்
கூர்மையில் கசியும்
ஒரு துளி கண்ணீர் காட்சி...
சாட்சியும் கூட!

மெதுவாய்
விழிகளை ஈரமாக்கி
இமைகளின் வரப்பில்
ஒரு கணம் தேங்கி நிற்கிறது!

சுதாகரித்துக்கொள்ள
போதிய நேரமில்லை...
பிளந்து விழுகிறது
கன்னப்பரப்பில்!

வலிகளுக்கான ஊடகம்
ஒரு நேர்கோட்டில்
பயணித்து வருகிறது கண்ணீரென!

மொத்த வலிகளையும்
ஈரமாக்கி
ஒரு நீர் உருண்டையாக்கி
தாடையின் விளிம்பில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது
ஒரு துளி மட்டும்!

-ரசிகன்
நன்றி
யூத்ஃபுல் விகடன்
http://new.vikatan.com/article.php?aid=3226&sid=98&mid=10


*
ரசிகன்!



வெள்ளோட்டமாய்
தொடங்கிய தனிமை...

எவ்வுயிர்கள் குழுமியிருப்பினும்
நாற்சுவர்களுக்குள்
அடைபட்டிருந்த ஒரு உலகம்!

விட்டம் அதன் வானம்..
மௌனம் அதன் காற்று..
தனிமை அதன் மக்கள்!
பரபரப்புகள் அற்ற
நினைவுகள்
என் அன்பிற்குரிய
இவ்வுலகத்தின் பிரதிவாதிகள்!

வந்த எல்லோருக்கும்
ஆளுக்கொரு கோப்பையென
பகிர்ந்தளித்து விட்டேன்...

சூடு தணிவதற்குள்
பருகியாக வேண்டும்
தேநீரை!

- ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102208&format=html
ரசிகன்!


பின்னிரவுகள்.,
ஒரு நாள் கணக்கு
நமக்கு!

நம்முலகை
இவ்விரவுகள் தத்தெடுத்திருப்பதாக
தொலைப்பேசிகள் பேசிக்கொள்கின்றன!

என்ன தொடங்கினோம்?
ஹ்ம்ம் என்பதாகவே
முடிவுறுகிறது உரையாடல்கள்!

பல
கணம் கடந்த காதலை
காமத்தின் ஒற்றை சொல்லில்
திணித்து வைத்திட
எண்ணமில்லை இருவருக்கும்!

காதல் தான்
நம்மை பேசிக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை சுவாசித்துக்கொண்டிருக்கிறது.,
காதல் தான்
நம்மை காதலித்துக்கொண்டிருக்கிறது!

உன்னை
தூங்க வைப்பதாய் நானும்
என்னை
தூங்க வைப்பதாய் நீயும்
ஒவ்வொரு பின்னிரவிலும்
தோற்றுப்போகிறோம் சேவலின் கூவலில்!


-ரசிகன்

நன்றி
கீற்று

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13107:2011-02-19-11-59-30&catid=2:poems&Itemid=265

நன்றி
அதீதம்
http://www.atheetham.com/iravukalam.htm
*
ரசிகன்!


எவருக்கும்
பதில் சொல்ல வாய்க்காத
கேள்வியொன்றில்
மௌனமாகவே விடை பெறுவதில்
எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை...

காதல் கூடாரத்தை
அனாதையாக்கும் காதலிகள்
கொஞ்சம் நினைவு,
கொஞ்சம் தனிமை,
கொஞ்சம் கூடுதலான
மௌனத்தை மட்டுமே
பரிசளித்துப் போகக் கூடும்!

பேரிரைச்சலின்
ஒரு நீள சாலையில்
முகவரி கேட்கும்
எப்பருவப்பெண்ணிடமும்
மௌனத்தின் விலாசத்தை
சொல்லி நகர்கிறேன்!

அறையை அடைந்ததும்
பரவிக் கிடக்கும்
தனிமை நாற்றத்தை
மௌனங்கள் மட்டுமே
ரசித்து நுகர்வதுண்டு...

ஒரு தற்காலிக உலகில்
மீள்வருகைக்கான
சாத்தியக்கூறுகள்
தென்படும்வரையில்....

மௌனத்தோடு
கை குலுக்கிக்கொள்வதில்
எந்த சிரமமும் இல்லை எனக்கு!

-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311021317&format=html
ரசிகன்!


மடிக்கணினியின்
நீர்ம படிக உருகாட்டியில்
நிலா திரவியமென
படர்ந்திருக்கிறாய்...

என் தலையணையின்
மேடுக்கு ஈடு கொடுத்தாற்போல
சமன்படுத்தப்பட்டிருக்கிறது
நம் முகங்கள்!

மோனலிசாவுக்கு
அடுத்தபடியாக
ஒரு இனம் புரியா
புன்னகை கொடுப்பவள்
நீ
ஒருத்தியாகத்தான் இருக்கக்கூடும் எனக்கு!

உன் இமைகள் அசைந்தபாடில்லை.,
கூர் தீட்டிய பார்வையில்
எனை குடைந்து ஊடுருவுகிறாய்...
கிறங்கிக் கிடந்த
ஏதோ ஒரு உயிரணுவை
உரசி சென்றிருக்கக்கூடுமென்பது
என் கணிப்பு...

கணினி
அயர்ந்து தூங்கிவிடும்
நிலையில்லா ஒரு கணத்தில்
உன் மேனி புகுந்து
புதைந்து விடத் தோன்றி விடுகிறது!



நன்றி
கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12962:-143&catid=2:poems&Itemid=265



*
ரசிகன்!


கிட்டத்தட்ட
பக்கம் வந்து அமர்ந்திருந்தாள்!

நெடு நேர காத்திருப்பில்
கோபம் எனக்கென்பது
அவள் யூகமாக இருக்கக்கூடும்!

நானும் காட்டிக்கொள்வதாயில்லை
என் அதிகபட்ச விருப்பம்
என்ன என்பதை...

இடைவெளிகளற்ற நெருக்கத்தில்
மெல்ல இசைந்து வரும் குரலில்
காதலை குடைந்து ஊற்றும்
தந்திரங்கள்
மிக விறுவிறுப்பானவை எனக்கு!

முகத் தோரணையிலேயே
விருப்பங்கள் தெரிவிக்க
அதன் ரகசியங்கள்
புரிந்துகொள்வது அவளுக்கு அத்துப்படி!

வெட்கி எழுந்து
மெல்ல எதிர் நின்று
என் கன்னங்களை அள்ளி..
காது திருகி...
செல்லமாய் ஒரு குட்டு வைத்தோடிவிடுவாள்
நாளைய காத்திருப்புக்கு!

-ரசிகன்



நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2011/02/blog-post_10.html#more



*
ரசிகன்!


ஒரு

கை அகல இடைவெளியில்

கடல் கடந்து போகிறது...


தடுப்புக்கம்பிகளின்

எல்லை கோடுகள் வழி

என்ன சொல்வதென தெரியாது

படர்கிறது கைவிரல்கள்

மௌனங்களை பிடித்தபடி.....


என் பக்கத்தில் இருப்பவன்

தன் குழந்தைக்கு

கொடுத்த முத்தத்தில்

எச்சில் ஈரம் கொஞ்சமும் இல்லை...

அவன் கண்ணீரை துடைத்ததும்

ஊற்றெடுக்க முயலும் என் கண்கள்!


விமான எஞ்சின் புறப்பாட்டில்...

தாரை தாரையாய்

கண்ணீர்விடும்

என் அம்மாவும் சரி

என் அப்பாவும் சரி


பல கடல் கடந்த அன்பை

ஒரு முத்தம் கொடுத்து வந்திருக்கலாமென

எனை எழுப்பி சொல்லி...


தாழப் பறக்கிறது விமானம்!


-ரசிகன்


நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102069&format=html
ரசிகன்!


எழுத படிக்க தெரியாத

ஒரு வாய்பேச முடியாதவனின்

காதல் கவிதை...


பொய் பேசாத

அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...


பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....


என் கடவுள் என்பது

உங்களின் கேள்விக்குறி

எந்தன் காற்புள்ளி!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102069&format=html


*
ரசிகன்!


ஆழ் நித்திரை
என்பதென்னவோ
பொய்த்துப்போன விஷயம் எனக்கு!

நிலா ஒரு பக்கம்...
நீ மறுபக்கம்..
இடையிலமர்ந்து விடுகிறது
கவிதையெனும் காமம்!

நீ தள்ளிவிடுகிறாய்...
இரவு வெளிச்சத்தில்
ஒரு புள்ளியாகி விடுகிறேன்!

பெய்யெனப் பெய்கிறது
காதல்...
எனை எடுத்து வைத்துக்கொள்கிறாய்...

ஒரு கையால்
தலைகோதி
மறுகையால் தட்டிக்கொடுக்க
கால் மடித்து தூங்குகிறேன்
உன் உள்ளங்கையில்...

காதலுக்கும்
காமத்துக்குமான
இச்சிறிய இடைவெளியில்
என் தூக்கம்
ஒரு அழகான பின்னணி இசையோடு
புணர்ந்து கொண்டிருக்கிறது!


-ரசிகன்

நன்றி
கீற்று
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12814:2011-02-03-23-27-18&catid=2:poems&Itemid=265


-------

விகடன்

http://new.vikatan.com/article.php?aid=2579&sid=78&mid=10

*
ரசிகன்!



மேகங்களை
புழுங்கச் செய்து விட்டு
மஞ்சம் மிச்சப்படுகிறது!

பூ மழையென
சாரல் பூக்க...
பூத்திருந்த பட்டாம்பூச்சிகள்
நனைந்தபடி
உன்னை சுற்றி படையெடுக்கும்!

கூடவே
வானவில்லும்
இடை நெளிந்து வர
அட... சேலையில் அது நீ தான்!

பிறகென்ன...
காலங்கள் கை கட்டி நிற்க
சொர்க்கங்கள்
பக்கம் வந்து விடுகிறது!
தற்சமயம்..
என் உலகம்
அதுவாகவே மாறிவிட
உன் இருப்பு வெப்பமயமாகிறது
சூடாய்
ஒரு ஐஸ் கிரீம் போல!

என் அருகில் அமர்ந்து
ஒற்றை விரலால்
என் தொடையை நிண்டிக்கொண்டே
நீ தோள் சாய்ந்து கொள்ளும்
அத்தருணம் போதுமெனக்கு!

காதல்.... காதல் தான்!
-
ரசிகன்

*
ரசிகன்!



தெரு நாய்களின்

குரைத்தலுக்கு

நடுக்கம் காணும் ஜன்னல் கதவுகள்!

வியர்த்தலுக்கு

ஈடுகொடுக்க முடியாத

மின் விசிறி மலட்டுத் தன்மையில்...

உச்சி நுகர்ந்திருக்கும் போர்வை

சடாரென விலக்க...

பேயாட்டம் போடும்

பதிண்வயது உணர்வுகளின்

மொத்த உணர்ச்சிகள்!

மற்றபடி.,

பழுப்பு நிற

ஜீரோ வாட் குண்டு பல்பும்

லேப் டாப்பில் ஒலிக்கும் பழைய பாடலும்

எழுந்து உட்கார வைத்து விடும்!

கொழுந்து விடும்

இந்நட்ட நடு இரவுகளின்

தாகங்கள்...

தலைமாட்டிலிருக்கும்

ஒரு டம்ளர் தண்ணீரில்

தணியப்போவதில்லை!


-ரசிகன்

*
நன்றி,
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311012315&format=html


நன்றி
அதீதம்!
http://www.atheetham.com/naduiravu.htm

*
ரசிகன்!


ஒரு
மிச்சப்பட்டிருந்த நாற்காலி
பரஸ்பரம் பேசுகிறது!

மூன்றாண்டுக்கு பின்
பார்க்கும் முகம் என்றோ
காதல் அறிமுகப்படுத்திவிட்ட
மனசு என்றோ

ஒரு சலனமுமின்றி
புன்னகைத்து திரும்பிக்கொண்டது
அந்த நாற்காலி!

நலம் விசாரிக்கையில்
ஓலமிட்ட அவள் கைபேசிக்கு
என் அனுமதி கேட்கிறாள்....

இங்கிதம் தெரிந்தவள்..
சங்கடங்கள் விரும்புவதில்லை...

எனக்கு
பிடித்தமான கவிதையையும்
அவள் விரும்பியது இல்லை!

நாற்காலி
மீண்டும் மிச்சப்பட்டிருந்தது!

- ரசிகன்

நன்றி!
கீற்று...

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=12356&Itemid=265
ரசிகன்!



எப்படியும்

தன் கைகளால்

முகத்தை மூடிக்கொள்வாள்

என் பார்வைக்கு!


அவள் கைகளை விலக்குவதா..?

என் பார்வையை விலக்குவதா?


சிவந்து போகும் வெட்கத்தில்

அவள் இருப்பாள்...

ஏமாந்து போகும் ஏக்கத்தில்

நான் இருப்பேன்!


எப்படியும்

ஒரு விரல் இடுக்கில்

எட்டிப்பார்த்திடுவாள்...

நிலாக்கள் சட்டென வழுக்கி விழும்!


நான் சுதாகரித்துக்கொள்ள

அவள் தலை குனிந்து விடுவாள்...


அவள் கன்னங்களை கிள்ளி

அப்படியே அள்ளிக்கொள்ளுதல்

அலாதி ப்ரியம் எனக்கு!


-ரசிகன்


நன்றி
திண்ணை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=311010215&format=html


*