06
Feb
ரசிகன்!


எழுத படிக்க தெரியாத

ஒரு வாய்பேச முடியாதவனின்

காதல் கவிதை...


பொய் பேசாத

அன்பை ஊட்டும் தாயின்

ஒரு கை நிலாச்சோறு...


பேச ஆரம்பிக்காத

செல்லம் கொஞ்ச துடிக்கும்

ஒரு குழந்தையின்

எச்சில் முத்தம்....


என் கடவுள் என்பது

உங்களின் கேள்விக்குறி

எந்தன் காற்புள்ளி!


-ரசிகன்

நன்றி
திண்ணை
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31102069&format=html


*
1 Response
  1. S.Vaighundan Says:

    Nice... keep rocking...


Post a Comment