
*
*
சதுப்பு மேசையில்
காதல் முன்னோட்டத்திற்கான
ஊடல் கரைந்தோடுகிறது!
ஒரு மெல்லிய தருணமது...
அவள் இதழுக்கும்
உரசும் ஐஸ் கிரீமுக்கும்...
இதழ் ரேகைகளின்
நெளிவு சுளிவுகளில் தேங்கி இருந்தவை
நாவுக்கு ஏற்ப
மொழி மாற்றம் செய்யப்பட
மீதமுள்ள பிழைகளை
திருத்தம் செய்கிறாள்!
இதழ்கள்
முன்னமே வண்ணம் தீண்டப்பட்டன!
புருவங்கள்
கூர் தீட்டப்பட்டன!
மயிரிழைகள்
ஓரம் கட்டப்பட்டன!
முகத் தோரணை
முடிவு செய்தாகிவிட்டது!
இக்கணம்
முன்னும் பின்னுமாய் பார்த்து
யாரும் பொருள்பட விளங்காது
திருத்தங்கள் செய்யப்பட்ட
கலைந்தாடிய ஆடையுடன்
"நல்லா இருக்கேனா"
என்ற கேள்வியோடு
முடித்து வைக்கிறாள்...
என்னையும் இக்கவிதையையும்!!!
*
நன்றி
கீற்று!
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9163:2010-05-30-18-02-02&catid=2:poems&Itemid=265

"
மழைக்காற்றின்
பின்னிரவுக்கு முன்பாக
காதல் திரவியங்கள் வாசம் தீட்டப்படுகின்றன
ஜன்னலின் விழி வழியோரம்!
சாரலென இதமாய்
மிதமாய் தூறும்வண்ணம்
மழலையின் முதல் முத்தம்
எச்சில் படர்ந்திருந்தது!
பதனிடப்பட்ட நாணங்கள்
துயிலெழும் தூரத்தில்
சலனங்கள் அர்த்தப்பட்டிருக்கக்கூடும்!
எதிர்பட்ட
கூச்சல்கள் மௌனித்துவிட
அங்குமிங்குமாய்
திட்டுத்திட்டாய் சில கூச்சக்கோடுகள்!
முன்னிரவுக்குப் பிறகான மிச்சத்தில்
முன்மொழிதல் அவளெனவும்
வழிமொழிதல் நானெனவும்
பின்னிரவுக்குப் பிறகான வெட்கத்தில்
தொடர மறுக்கும்
என் பேனா முனை!
- ரசிகன்
***
நன்றி ,
கீற்று!
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8937:2010-05-25-05-22-20&catid=2:poems&Itemid=265

*
ஒவ்வொரு
காதலின் சட்டைப்பையிலும்
ஆயிரமாயிரம்
புண்பட்ட மௌனங்களும்
மேம்பட்ட சலனங்களும்
ஆரவாரம் செய்து கொண்டிருக்கின்றன!
அதில்
குறிப்பிடும்படியாக
குறிப்பெழுதும்படியாக
ஒன்றிரண்டு மட்டும்
அவ்வப்பொழுதான பகிர்தலின் பொருட்டு
பசியாற்றப்பட்டு விடுகிறது!
மீதம் எஞ்சியவை
ஒற்றை மரப்பட்டையிலும்
கோவில் உள் மதில்சுவரிலும்
கடற்கரையோர அலைபரப்பிலும்
காதலியின் பெயரென
அழகாய்
அழுத்தமாய் கிறுக்கப்படுகிறது!
***
நன்றி,
திண்ணை...
*
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005161&format=html***
நன்றி,
உயிர்மை
*
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2931

"
பயணத்தின்
பெயர் மற்றும் முகவரி
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!
மெல்லினம் அவளெனவும்..
வல்லினம் நானெனவும்,
முரண்பாடுகள் ஒன்றுவது போல்
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !
தோள் சாய்தல் பகிர்வதாகவும்
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!
இந்நெறிமுறைகளுக்குட்பட்டு
பாதைகள் தீர்மானப்பட..
நடுவானத்தில்,
பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள்
முடியாது நீளும்
என் பயணத்தில்
இன்று நட்பிற்குப் பதில்
தனிமை விரல்கள்!
-ரசிகன்!
***
நன்றி,
கீற்று!
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8460:2010-05-11-13-01-53&catid=2:poems&Itemid=265

"
சொல்ல வந்ததை
முதலில்
சொல்லிவிடுவதாக கூறி
மௌனம் பேசத் தொடங்குகிறாள்!
முன் பொழுதும்
முன்னெப்பொழுதும்
ஆரம்ப நிலை
இதுவாய்தானிருந்தது!
இன்றேனும்
சொல்லிவிடுவதை போல
உடல் மொழிகள்
அறிவித்தவண்ணம் இருந்தன!
பொறுமையிழந்த நேரம்
பின்
சந்திப்போம் என்றவாறு கடக்க
இவளும்
அடுத்தொரு நாள்
நமக்கானதாய் இருக்கிறதென்பதை
சொல்லாமல் சொல்லியவாறு
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு!
-ரசிகன்
***
நன்றி...
கீற்று!
*
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8362:2010-05-08-07-21-49&catid=2:poems&Itemid=265

"
பிஞ்சு விரல்களின் பிடியில்
சிலேட்டு பரப்பில்
கரையத்தொடங்கும் பல்பம்!
அம்ம்ம்ம்ம்மா......
என உச்சரித்தவாறு
வட்டங்களை வரையும்
பல்ப முனைகள்!
முதலிரண்டு கண்ணாம்,
கீழ்
கொஞ்சம் நெளிந்தவாறு மூக்காம்,
அடுத்து
இரு கோணல் கோடிட்டு வாயாம்!
இது பொட்ட்ட்டு.....
என்றழுத்தியதில்
உடைபட்டுப்போனது
பல்பம் இரண்டாய்!
உயிரொன்று குறைகிறதென்று
பால்யத்தின் உச்சத்தில்
சிலேட்டில்
பதிக்கிறதொரு ஈர முத்தம்-
பல்ப துகள்களை
ருசிக்க தொடங்கியவாறு!
-ரசிகன்
நன்றி!!!
யூத்புல் விகடன்!
***
http://youthful.vikatan.com/youth/Nyouth/rasiganpoem070510.asp

"
மீண்டும் மீண்டும்
துண்டிக்கப்படும் அழைப்பு!
பேச விழையும் வார்த்தைகள்
ஒன்றோடொன்று
முட்டிக்கொள்ள
பதற்றமாய்....
அங்குமிங்குமாய் அலையும் மனம்!!!
அடைக்கலப்படுத்தல் சாத்தியமின்றி
மீண்டும்
இணைக்க விடுக்கும் அழைப்பு....
மாறாய் இம்முறை
அணைக்கப்பட...
சொல்லவந்தவை அனாமத்தையாய்!!!
-ரசிகன்
|

"
ஒரு மஞ்சள் பூசிய
மாலைவேளை சந்திப்பில்...
வெள்ளுடை விலாவாரியாய் ...
வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு
நெளிந்து கொண்டிருந்தது
அவளும் காதல் சார்ந்தவையும்!
பக்கவாட்டில்
பசிக்கடங்கிய மழலையாய்
மடிசாய விழைந்தபடி நான்!
இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்
மீறப்பட்ட வண்ணம் ,
சலித்துப்போயிருந்தன..
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் பேச்சுக்கள்!
ஏக்கங்களின் மிகுதியில்
மின்னல் கீற்றுகள்!
உள்ளுக்குள்
வெட்டவெளிச்சமாய் பீய்ச்சியடிக்கப்படவும்
சட்டென சுதாகரித்தவளாய்
எழுந்து நடை பழகுகிறாள்..
பின் சற்று யோசித்தவளாய்..
சட்டென நெருங்கி,
இடைக்கும் இடது கைக்குமான
தன் இடைவெளியை
என் வலது கைகொண்டு
இறுக்க அணைத்து நிரப்பியபடி
மீண்டும் நடைபயில்கிறாள்!!!
***
நன்றி
திண்ணை!
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005027&format=html
நன்றி
உயிர்மை..
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2867