ரசிகன்!

*

*
சதுப்பு மேசையில்
காதல் முன்னோட்டத்திற்கான
ஊடல் கரைந்தோடுகிறது!

ஒரு மெல்லிய தருணமது...
அவள் இதழுக்கும்
உரசும் ஐஸ் கிரீமுக்கும்...

இதழ் ரேகைகளின்
நெளிவு சுளிவுகளில் தேங்கி இருந்தவை
நாவுக்கு ஏற்ப
மொழி மாற்றம் செய்யப்பட

மீதமுள்ள பிழைகளை
திருத்தம் செய்கிறாள்!

இதழ்கள்
முன்னமே வண்ணம் தீண்டப்பட்டன!

புருவங்கள்
கூர் தீட்டப்பட்டன!

மயிரிழைகள்
ஓரம் கட்டப்பட்டன!

முகத் தோரணை
முடிவு செய்தாகிவிட்டது!

இக்கணம்
முன்னும் பின்னுமாய் பார்த்து
யாரும் பொருள்பட விளங்காது

திருத்தங்கள் செய்யப்பட்ட
கலைந்தாடிய ஆடையுடன்

"நல்லா இருக்கேனா"
என்ற கேள்வியோடு
முடித்து வைக்கிறாள்...
என்னையும் இக்கவிதையையும்!!!

*
நன்றி
கீற்று!
***
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9163:2010-05-30-18-02-02&catid=2:poems&Itemid=265


6 Responses
  1. இதழ் ரேகைகளின்
    நெளிவு சுளிவுகளில் தேங்கி இருந்தவை
    நாவுக்கு ஏற்ப
    மொழி மாற்றம் செய்யப்பட

    மீதமுள்ள பிழைகளை
    திருத்தம் செய்கிறாள்!

    "நல்லா இருக்கேனா"
    என்ற கேள்வியோடு
    முடித்து வைக்கிறாள்...
    என்னையும் இக்கவிதையையும்!!!

    உங்கள் பேனாவில் காதல் நிரம்பிவழிகிறதோ???
    அருமையான கவிதை....


  2. Priya Says:

    ரசனையான வார்த்தைகள்... ரியலி சூப்பர்ப் துரை.


  3. @jayaseelan:

    appappo.. edhaavadhu kasiyum!

    avvalavey :P

    nanri jayaseelan :)


  4. @priya:

    thank u ... thank u very much :)


  5. Unknown Says:

    lovely poem.... :)



Post a Comment