ரசிகன்!



எல்லாமும்
முடிந்து போயிருக்கும் இந்நேரம்!

அணையப்பட்ட விளக்கு
ஏற்றப்பட்டிருக்கும் இவ்வேளை

என்னில் கொஞ்சியதைப்போலவே
வாழ்வை தொடங்கியிருக்கக்கூடும் அவள்!

கடவுள் இருந்திருப்பதாக
பலமுறை வேண்டியிருக்கிறாள்...
நீ,
நான்,
நம் குழந்தை
என ஒரு உலகுக்காக!

நிராகரிக்கப்பட்டது!
பதில்- ஆதாம் ஏவாளுக்கு காவு விடப்பட்டிருக்கும்!

இனிவரும்
உணர்வுகளோ , வார்த்தைகளோ
ஆபாசமானதாகவும்
வன்மையாகவுமே இருக்கக்கூடும்!

நானும்
சராசரி மனிதன் தானே?
திடப்படுத்திய மனதுடன்
புள்ளி வைக்கிறேன்!

உங்களில் யாரேனும்
காதலியை தாரை வார்த்திருக்கக்கூடும்!
என்னால் தொடர முடியாத
இக்கவிதையை
நீங்கள் முடித்து வையுங்கள்...

என் மௌனம்..
என் தனிமை..
எனக்காக காத்திருக்கிறது!

*
நன்றி!
வார்ப்பு

http://vaarppu.com/view/2285/



*
1 Response
  1. rajkumar.r Says:

    என் மௌனம்..
    என் தனிமை..
    எனக்காக காத்திருக்கிறது!


Post a Comment