ரசிகன்!


என் தாய் மொழி தமிழ்...
ஆங்கில வழியில் பயின்றவன்! பயின்று கொண்டிருப்பவன்!
தமிழை சுவாசிப்பவன் அல்ல! நேசிப்பவன்!

இன்று காலை... என் முகநூலில் (FACEBOOK) தகவல் பெட்டிக்கு ஒரு தகவல் வந்திருந்தது...
என் நட்பு வட்டாரத்தில் ஒருவர்.. அவரை பற்றி முழுமையாக தெரியாது...
ஒரு கவிஞர் , எழுத்தாளர் என்றளவில் மட்டும் தெரியும்... அவரை மதிக்கிறேன்! அவரிடமிருந்து தான் அச்செய்தி

வந்த செய்தி:
--------------
(NO EDIT! ONLY CUT , COPY & PASTE)

"உங்களை மாதிரி இடியட் இன்டியன் சிலரால் தான் தமிழே சாகுது. நாங்கள் தமிழை வளக்கிறம். நிங்களோ கவிதை மட்டும் தமிழில் எழுதிப்போட்டு மிச்சமெல்லாத்தையும் ஆங்கிலத்தமிலில் பதிலா. ஏன?; இப்படி கிறுக்குத்தனமா செய்து தமிழை மட்டுமல் எங்களையும் கொல்லுறியள். ஓ நானும் இடியட் இன்டியன் என தமிழில் எழுதினேனா. அப்பிடிச்சொன்னாத்தானே உங்களுக்கெல்லாம் புரியுது.அது தான். உங்களை எனது நட்பு வட்டாரத்தில் இருந்து நீங்கிக்கொள்கிறேன்."


கொஞ்சம் வேதனையாக தான் இருந்தது... இருந்தும் என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்!

* நான் தமிழ் வளர்ப்பவன் அல்ல!
* நான் ஆங்கிலம் எதிர்ப்பவன் அல்ல!

எனக்கு தமிழ் முழுமையாய் தெரியாது... படித்த/தெரிந்த/புரிந்த/அறிந்த தமிழை கொண்டு கவிதை என்ற பெயரில் (கவிதை இல்லை) வார்த்தைகளை கோர்த்து விடுகிறேன்! அவ்வளவே!

நான் தமிழை எதிர்ப்பவன் போலவும்... கொலை செய்பவன் போலவும் எவ்வளவு அழகாய் சொல்லி விட்டார்கள்!

அதெல்லாம் விடுங்க!
நான் என்ன சொல்ல வரேன்னா...

பின்னூட்டத்திலோ / அல்லது வேறேனும் இடத்திலோ நான் ஆங்கிலம் உபயோகித்தல் பிடிக்காதிருக்கும் பட்சத்தில் தாங்களே என்னை நீக்கிக்கொள்ளலாம்!
தமிழை கொலை செய்யும் நோக்கம் எதுவும் இதுவரை இல்லை... நீங்கள் வந்திருப்பதாக சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை :)
உங்களின் கண்டிப்போ/தண்டிப்போ/நீக்குதலோ என்னை எதுவும் செய்யப்போவதில்லை!

நான் நீங்கள் இல்லை! உங்களைப்போல் இல்லை!

இது என் விருப்பமாகவும் இருக்கலாம்... நிர்ப்பந்தமாகவும் இருக்கலாம்!

பி.கு : ஏதேனும் தவறாகவோ / மரியாதை குறைவாகவோ / தமிழை இழிவாகவோ பேசியிருந்தால்... இச்சிறுவனை மன்னிக்கவும்!

நன்றி,
ரசிகன்

*
5 Responses
  1. வணக்கம் துரை...
    //
    எனக்கு தமிழ் முழுமையாய் தெரியாது... படித்த/தெரிந்த/புரிந்த/அறிந்த தமிழை கொண்டு கவிதை என்ற பெயரில் (கவிதை இல்லை) வார்த்தைகளை கோர்த்து விடுகிறேன்! அவ்வளவே! //

    உங்களுக்கு மட்டுமல்ல நண்பா இதை எழுதத் தூண்டிய அந்த நண்பருக்கும் தமிழ் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை... எந்த ஒரு மொழியும் கடல்... கால் நனைக்கலாம்(பலருக்கு அது ஆனந்தத்தை தரும்), மூழ்கியும் போகலாம்(சிலருக்கு இது ஆனந்தத்தை தரும்)ஆனால் முழுவதுமாய் குடித்துவிடமுடியாது... அதேசமயம் அந்தக் கடல்(மொழி) தரும் குளுமையையும், அதில் புதைந்து கிடப்பவற்றை தேடுவதையும் மறந்துவிடக் கூடாது.(நாம் அதைத்தான் செய்கிறோம் நண்பா)

    உங்களுக்கு தெரியாததல்ல... ஒரு மொழிக்கு நாம் செய்யும் மரியாதை அதன் தடயங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பது...

    உங்களின் கவிதைகளின் மூலம்(வெறும் வார்த்தைக்கோர்ப்புகள் அல்ல)அதை நீங்கள் செம்மையாகவே செய்து வருகிறீர்கள்... தொடருங்கள்...

    நண்பன்
    -ஜெயா.


  2. Unknown Says:

    //இடியட் இன்டியன்//
    //சாகுது//
    //வளக்கிறம்//
    //நிங்களோ//
    //ஆங்கிலத்தமிலில்//
    //ஏன?//
    //மட்டுமல்//
    //உங்களை எனது நட்பு வட்டாரத்தில் இருந்து நீங்கிக்கொள்கிறேன்//

    நல்லா வளர்க்கிறாங்களே தமிழை...
    அதிலும்
    //இடியட்
    இந்தியன்//
    கவிதை கவிதை


  3. ஹா ஹா ஹா(பயந்திடாதீங்க, சிரிச்சேன்!!!). சபாஷ் கலாநேசன்.


  4. guruvukku vantha sothanai...


  5. mages Says:

    இதை கவிதை என்று நினைத்து தான் படித்தேன்...இருந்தாலும்...ரசிகன் என்னும்....உனக்கு வந்த...சோதனை என்று படித்து முடிந்த பிறகுதான் தெரிகிறது........


Post a Comment