
"
வந்து
போய் கொண்டிருக்கிறார்கள்...
கட்டப்பட்ட
கால் கட்டை விரல்கள்,
மூக்கடைத்த
வெண் பஞ்சு என
அடையாளம்
காட்டி
எண்ணி அழுவதும்
துக்கம் விசாரிப்பதுமாய்
இயல்பாய்
வந்து
போய் கொண்டிருக்கிறார்கள்...
|

"
இதயத்தின்
சிறிய துளைதனில்
நுழைய முயற்சிக்கும்
சுவாசக்காற்று
நினைவுகளின்
வெப்பம் தாளாமல்
சட்டென வெளியேறிவிடுகிறது!
பதற்றத்தில்
சில வினாடிகள்
ஒன்றுமே புரிவதில்லை..
எழுத நினைத்த
வார்த்தைகளும்
குழப்பத்தில்
பின் வாங்கிக்கொண்டன!
ஒரு வேளை...
இந்நிலை
உங்களுக்கு புரிந்திருக்க கூடும்
என்ற எண்ணமோ என்னவோ!

உன்
கழுத்தினை வருடும்
செயினை எடுத்து
கடிக்கின்றாய் வெட்கத்தில்-
என் பற்கள் கூசுகின்றன!
அதை விடு...
நீ
நகங்கள் மெல்ல
கடிக்கும்போது
தெரியுமா?
ஏனோ
என்
விரல்கள்
நாணம் கொள்கின்றன!
நீ
என்னை
திரும்பி பார்க்கையில் எல்லாம்
என்னை
கண்ணாடி பார்க்க செய்கின்றாய்!
நீ
தெய்வம் வணங்க
கோயில் படி ஏறுகையில்
என்னை
காதலை வணங்க செய்கின்றாய்!
சொல் பெண்ணே!
இவை பழக்கமா?
இல்லை இனி என் வழக்கமா?
|

உனை பார்க்க
பேருந்து நிறுத்தத்தில்
நான்!
ஐயோ!
தோழிங்க எல்லாம் இருக்காங்க,
பார்த்துட போறாங்க
போ!!! போ !!!
என்றாய் பதற்றத்துடன்!
நான்
செல்கையில்
நீயும்
பின்னாடியே வந்துவிட்டாய்
சிறு வெட்கத்துடன்!
நினைவிருக்கிறதா?
-----------------
நிலாச்சாரல் : http://www.nilacharal.com/ocms/log/10120906.asp

ஒரு
ஞாயிறு மாலை;
அந்தி உடல் போர்த்தும் வேளை!
வீடு விட்டு
வெளியில் வருகிறேன்,
முன் பின் அறிமுகமில்லாத நீ
யாரென்றே தெரியாத நான்!
குளிர்காலம்
தாளம் போட
ஐஸ்மழை கொட்டிய சாலையில்
கொஞ்சலாய் வருடும் ஈரப்பதம்!
நீ
கால் தடங்களை
மேலோட்டமாய் வரைந்து செல்கிறாய்!
நான்
என் தடம் கொண்டு
அழுத்தமாய் பதிவு செய்தபடி வருகிறேன்!
மெதுவாய் தான் நடந்து வந்தாலும்
மனசு வேகமாய் ஓடிவந்து
மூச்சு வாங்கியபடி,
சாலையை கடக்க நிற்கும்
உன் பக்கம் வந்து நிற்கிறது!
ஏனோ!
சின்னதாய் ஒரு புன்னகை பூக்கிறாய் நீ!
ஏதோ!
உலகை வென்ற இறுமாப்பில் - ரசிகன்!
------------------------------------
நன்றி
யூத்புல் விகடன்!!!
http://youthful.vikatan.com/youth/Nyouth/duraipoem230310.asp

அது
ஒரு மழைக்காலம்!
நான்
காலைல கொடுத்த
கடிதம் பத்தி......
என் இழுத்தாய்!
உனக்கு
வெட்கமா இல்லையா என்றேன்!
அழுகிறாய்!
உன்னோடு சேர்ந்து வானமும்!
ஏன் அழற?
கொஞ்சம்
வெட்கப்பட்டு கேட்டிருந்தா
நல்லா இருக்குமே என்றேன்!
வெட்கத்தில்
கலைந்து போனது மேகம்!
உன் முகமும் தான்!
நினைவிருக்கிறதா?

"
நான்
பயணிக்கும்
பாதை நெடுகிலும்
சாலையோர
மரங்களில்
உன் நினைவுகள்
எனக்காய் பூத்திருக்கும்!"